search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதா இல்லம்"

    • போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார்.
    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை.

    சென்னை:

    சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவர் சசிகலா. அவரது மரணத்துக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளரானார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறை தண்டனை முடிந்து அவர் வெளியில் வருவதற்குள் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த கட்சிக்குள் சசிகலாவால் அதிகாரம் செலுத்த முடியாமல் போய் விட்டது. இருப்பினும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிகலா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    தனது ஆதரவாளர்களை அடிக்கடி சந்தித்து பேசி வரும் சசிகலா சுற்றுப் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை ஒன்றிணைப்பேன் என்று கூறி வரும் சசிகலா தி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எதிரில் 2 மாடிகளை கொண்ட பங்களா வீடு ஒன்றை சசிகலா கட்டி உள்ளார். வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சில நாட்கள் முடக்கி வைத்திருந்தனர். கோர்ட்டு நடவடிக்கைகள் முடிவடைந்து சிக்கல்கள் தீர்ந்து உள்ள நிலையில் சசிகலா நேற்று புதிய வீட்டில் பால் காய்ச்சினார். அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கிரகபிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை. நேற்று காலையில் கிரகபிரவேசம் முடிவடைந்துள்ள நிலையில் சசிகலா இனி போயஸ்கார்டனில் உள்ள புதிய வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    2 மாடிகளை கொண்ட வீட்டில் மாடியின் ஒரு பகுதியில் 500 பேர் அமரும் வகையில் கூட்ட அரங்கம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை வீட்டிலேயே கூட்டி ஆலோசித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்திலேயே சசிகலா தனது வீட்டில் அரசியல் கூட்ட அரங்கை கட்டி உள்ளார்.

    இதனால் சசிகலாவின் அரசியல் பணிகள் போயஸ் கார்டனில் இருந்து இனி வேகமெடுக்கும் என்றே சசிகலா ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.
    • சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    சென்னை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை ஆனார். பின்னர் அவர் தி.நகரில் வசித்து வந்தார். இதனிடையே போயஸ் தோட்டம் பகுதியிலேயே வேதா நிலையம் இல்லத்திற்கு எதிரிலேயே புதிய வீடு கட்டும் பணிகள் கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்தே நடந்து வந்தது.

    இந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்கு எதிரே சசிகலா புதிதாக வீடு ஒன்றை கட்டி இன்று அதிகாலை கிரகபிரவேசம் செய்துள்ளார்.


    சுபமுகூர்த்த சுபதினமான இன்றைய தினம் புதிய இல்லத்தில் கோ பூஜை நடத்தி விநாயகரை வழிபட்டு பால்காய்ச்சி குடியேறி உள்ளார்.

    • போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும்.
    • எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.

    அதேநேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் ஜெயலலிதாவின் வீட்டை சசிகலா மறைமுகமாக வாங்க டிரஸ்ட் அமைத்துள்ளதாக உறுதி இல்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஜெயலலிதாவின் வீடு யார் கைக்கு போகும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

    இதற்கு ஜெ.தீபா முற்றுப்புள்ளி வைத்து ஜெயலலிதாவின் வீட்டில் தான் குடியேற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக இணையதளத்தில் ஆடியோ ஒன்றை ஜெ.தீபா வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் தீபா கூறி இருப்பதாவது:-

    போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எங்களின் பூர்வீக சொத்தாகும். எனது பாட்டி சந்தியா மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.

    எனது தந்தை ஜெயகுமாரும், தாயார் விஜயலட்சுமியும் அங்குதான் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். அந்த வீட்டில் தான் நானும் பிறந்தேன்.

    பின்னர் மிகச்சிறிய கருத்து வேறுபாடுகள் காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு தி.நகரில் உள்ள மற்றொரு பூர்வீக இல்லத்தில் வசித்து வந்தோம்.

    ஜெயலலிதா அழைக்கும் போதெல்லாம் போயஸ் கார்டன் சென்று வருவோம். ஒரு காலக்கட்டத்தில் அவர் கேட்டுக்கொண்டதால் அங்கேயே இருந்து வந்தோம். பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்ட பிறகு அந்த வீட்டில் இருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம்.

    இந்த பூர்வீக சொத்தை கோர்ட்டு வழியாக நானும், தீபக்கும் திரும்ப பெற்றுள்ளோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்ததால் அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருக்கலாம். அப்படி உள்ள எல்லோருமே அவருடைய சொத்துக்கு உரிமை கோர முடியாது.

    குடும்ப அந்தஸ்தை பெறவும் முடியாது. குடும்ப சொத்துக்களிலும் உரிமை கோர முடியாது. ஜெயலலிதாவுடன் பயணித்தோம் என்று சொல்லும் சசிகலா குடும்பத்தினருக்கும் இது பொருத்தமானது.

    ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அந்த வதந்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவும் இல்லை. யாரையும் அணுகவும் இல்லை. யாரும் எங்களை அணுகவும் இல்லை.

    வேதா நிலையத்தை பொறுத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நான் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டு இருக்கிறேன். மிக விரைவில் அங்கு குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×