search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ"

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
     
    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



    அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
    வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார். #MikePompeo
    வாஷிங்டன்:

    பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

    இந்த சந்திப்பின் போது, அணு ஆயுதங்கள் கைவிடல், பொருளாதார பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து, வடகொரியா தங்கள் நாட்டில் செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூடுவதாக அறிவித்தது. ஆனால் அதில் மெத்தனம் காட்டியது வடகொரியா.

    இந்நிலையில், வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்ப் - கிம் ஜாங் அன் சந்திப்பு நடந்து ஆறு வார காலமாகியும் வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழிக்கவில்லை.

    வடகொரியா அரசு இன்னும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்தவில்லை. கிம் ஜாங் அன் கொடுத்த வாக்குறுதியால் அந்த பகுதியில் நிலவிய பதட்டம் பெருமளவு குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். #MikePompeo
    ×