search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வு"

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று ஏரியில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது மட்டுமில்லாமல் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்தது.

    பின்னர் வடவாறு வழியாக கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1400 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவை விட 50 கன அடி குறைவாகும். நேற்று ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவு உள்ளது. தற்போது ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து கடந்த 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று 476 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 76 கன அடி அதிகமாகும். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அந்த அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து 102 கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 16 கிலோ மீட்டர் நீளமும், 5.6 கிலோ மீட்டர் அகலமும், 48 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டது.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்தது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,400 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 145 கனஅடி குறைவாகும்.

    ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.06 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.80 அடியாக உள்ளது. தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நேற்று விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவு கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.

    வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில், ஸ்ரீ முஷ்ணம், சிதம்பரம், புவனகிரி, தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து நாளை காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். விவசாயத்தின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 125 கனஅடி குறைவாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 46.25 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 900 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 274 கனஅடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. எனவே விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிவடைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நாளை (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். #VeeranamLake

    கீழணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 46.40 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,524 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,545 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 21 கனஅடி அதிகமாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.80 அடியாக இருந்தது. இன்று ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.10 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு அதே அளவு 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. அது முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற 26-ந் தேதி வீராணம் ஏரியில் இருந்து வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #VeeranamLake
    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 920 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கன அடி தண்ணீர் குடிநீருக்காக அனுப்பப்படும். நீர் வரத்து இல்லாததால் கடந்த 5 மாதங்களாக வீராணம் ஏரி வறண்டு பாலைவனம் போல் காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக கடந்த 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    வீராணம் ஏரிக்கு நேற்று 920 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.05 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.40 அடியாக உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் இன்னும் 2 நாட்களில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    வீராணம் ஏரியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளதால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏரி முழுமையாக நிரம்பியவுடன் முதலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிகிறது. #VeeranamLake
    கீழணையில் இருந்து வடவாறு வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.

    சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 43.35 அடியாக இருந்தது. இன்று அது படிப்படியாக உயர்ந்து 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விரைவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் அதிகளவு உள்ளதால் வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. ராட்சத குழாய்கள் , மோட்டார்கள் பராமரிப்பு பணிகள், நீரேற்று நிலைய குழிகள் மற்றும் குழாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த பணிகளை சென்னை மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வீராணம் ஏரியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சென்னைக்கு இன்னும் 1 வாரத்தில் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.  #VeeranamLake
    ×