search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veeranam Lake water level hike"

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    இந்த ஏரி மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஏரி விளங்கி வருகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. அங்கிருந்து காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது.

    பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,350 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 47 அடியாக இருந்தது. இன்றும் அதே அளவு நீர் மட்டம் உள்ளது. தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து 34 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 476 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து 476 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து 102 கிராமங்களில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 16 கிலோ மீட்டர் நீளமும், 5.6 கிலோ மீட்டர் அகலமும், 48 கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டது.

    இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி. சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது. கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்தது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக ஏரியின் நீர் மட்டம் உயர்ந்தது.

    கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு நேற்று 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,400 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 145 கனஅடி குறைவாகும்.

    ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.06 அடியாக இருந்தது. இன்று ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 46.80 அடியாக உள்ளது. தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நேற்று விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரியின் 34 மதகுகள் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றும் அதே அளவு கன அடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளது.

    வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவில், ஸ்ரீ முஷ்ணம், சிதம்பரம், புவனகிரி, தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி உள்ளனர். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது. #VeeranamLake
    வீராணம் ஏரியில் இருந்து நாளை காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். விவசாயத்தின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதரமாகவும் வீராணம் ஏரி விளங்குகிறது.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரிநீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 1,545 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 1,420 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய அளவைவிட 125 கனஅடி குறைவாகும். ஏரியின் நீர்மட்டம் நேற்று 46.10 அடியாக இருந்தது. ஏரியின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று 46.25 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவு 74 கனஅடி தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டது.

    கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் இருந்தது.

    இதையடுத்து தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு நேற்று 626 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று அந்த அணைகட்டுக்கு 900 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது நேற்றைய அளவை விட 274 கனஅடி அதிகமாகும்.

    பின்னர் அந்த தண்ணீர் வெள்ளைராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது.

    வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளது. எனவே விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய்கள் தூர்வாரும் பணி முடிவடைந்தது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வீராணம் ஏரியில் இருந்து நாளை (26-ந் தேதி) காலை 10 மணி அளவில் வடவாறு, வடக்குராஜன், தெற்குராஜன் மதகுகள் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். #VeeranamLake

    ×