என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடியாக உயர்வு- பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா?
Byமாலை மலர்4 Aug 2018 4:18 AM GMT (Updated: 4 Aug 2018 4:18 AM GMT)
கீழணையில் இருந்து வடவாறு வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 43.35 அடியாக இருந்தது. இன்று அது படிப்படியாக உயர்ந்து 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விரைவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் அதிகளவு உள்ளதால் வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.
வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. ராட்சத குழாய்கள் , மோட்டார்கள் பராமரிப்பு பணிகள், நீரேற்று நிலைய குழிகள் மற்றும் குழாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த பணிகளை சென்னை மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வீராணம் ஏரியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சென்னைக்கு இன்னும் 1 வாரத்தில் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. #VeeranamLake
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் வசதிக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த 5 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் வீராணம் ஏரி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையில் இருந்து காவிரி தண்ணீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. அங்கிருந்து கீழணைக்கு வந்த தண்ணீர் வடவாறு வழியாக 27-ந் தேதி வீராணம் ஏரிக்கு வந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 2,200 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. இன்றும் அதே அளவு கனஅடி தண்ணீர் வந்தது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 43.35 அடியாக இருந்தது. இன்று அது படிப்படியாக உயர்ந்து 44 அடியை எட்டியது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விரைவில் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் அதிகளவு உள்ளதால் வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.
வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்காக ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் எப்போது திறந்து விடப்படும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைப்பதற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த நீரேற்று நிலையத்துக்கு கடந்த 30-ந் தேதி காவிரி தண்ணீர் வந்தது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முன்னேற்பாடு பணிகள் நடக்கிறது. ராட்சத குழாய்கள் , மோட்டார்கள் பராமரிப்பு பணிகள், நீரேற்று நிலைய குழிகள் மற்றும் குழாய்கள் சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த பணிகளை சென்னை மெட்ரோ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வீராணம் ஏரியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் சென்னைக்கு இன்னும் 1 வாரத்தில் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. #VeeranamLake
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X