search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் மனு"

    • குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

     திருப்பூர் : 

    பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கம் பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் 4-வது மண்டலத்தில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இந்த பாசனப்பகுதி கடைமடை பகுதியாக உள்ளதால் எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மழைபொழிவும் இல்லாததால் பாசன நிலங்கள் வறண்டு விட்டன. பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் 124 கிலோ மீட்டரில் பிரியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் ஜீரோ பாய்ண்டில் வினாடிக்கு 131 கன அடி தண்ணீர் வரவேண்டும். ஆனால் 112 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்துக்கு 15 நாட்கள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுபோல் இப்போது வரும் நீரின் அளவை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் மனு
    • 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் இன்று நடந்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்த பொதுமக்கள் மனு அளித்தனர். குமரி மாவட்ட பா.ஜனதா விவசாய அணி மாவட்ட தலைவர் முருக ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கூட்டாக வந்து ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போராட்டம்குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழில் ஆகும். தற்போது பருவ மழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே, விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கால்வாய்களை தூர்வாரி ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இன்னும் கடைமடை வரம்புக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் அந்த பகுதிகளில் உள்ள நெற்பயிர் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.

    அதே சமயம் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. குமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாத பட்சத்தில் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி கடை வரம்பு பகுதிக்கு உடனடியாக தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 25-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல தடிக்காரன்கோணம் ஊராட்சியை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் வந்து தனித்தனியாக மனு அளித்தனர். அந்த மனுக்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் தடிக்கா ரன்கோணம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சொத்துக்களோ, வீடோ இல்லை. சொந்தமாக வீடு வாங்கும் வசதியும் இல்லை. நாங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எனவே தடிக்காரன்கோணத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனையுடன் பட்டா தந்து பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.
    • அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனர்,

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேவுள்ள பந்தாரஹள்ளி ஏரி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது.ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி கட்டியதால் ஏரியில் கூடுதலான அளவிற்கு தண்ணீர் நிரம்பிதாழ்வான பகுதியாக உள்ள கீழ் சவுளுப்பட்டி கிராமத்தில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது.

    தண்ணீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல், அவரை, உள்ளிட்ட விளை பயிர்கள் தண்ணீரில் அழுகியுள்ளது. இந்நிலையில் அழுகிய நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனர், இது தொடர்பாக காரிமங்கலம்

    பி.டி.ஓ. அலுவலகம், காரிமங்கலம் வட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலகத்திலும் புகார் மனு கொடுத்திருப்பதாகவும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    • திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
    • அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவினாசி:

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை குளங்கள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 971 குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது.

    மாநில அரசின் 1,652 கோடி ரூபாய் செலவில், கடந்த 2019 டிசம்பர் 25ல் திட்டப்பணி துவங்கியது. 6 நீரேற்ற நிலையங்கள், குளம், குட்டைகளுக்கு குழாய் பொருத்தும் பணி உட்பட 94 சதவீத பணிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது என திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்திட்டத்துக்கென திட்டம் சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அரசின் சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சில பயனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில் அந்த தொகையை ஒதுக்க அரசின் சார்பில் நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் திட்டப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியம், குருசாமி உள்ளிட்டோர் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து, மனு வழங்கியுள்ளனர்.அதில், கூறியிருப்பதாவது:-

    அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தி வரும் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு குழாய் பதிக்க நிலம் வழங்கிய விவசாயிகள் சிலருக்கு, இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.எனவே அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட்டு இழப்பீடு வழங்கவும், தற்போதைய பருவமழை காலத்திற்குள் பணியை முடித்து திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    ×