search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் திறப்பு நாட்களை அதிகப்படுத்த வேண்டும் -  விவசாயிகள் கலெக்டரிடம் மனு
    X
    கோப்புபடம்

    தண்ணீர் திறப்பு நாட்களை அதிகப்படுத்த வேண்டும் - விவசாயிகள் கலெக்டரிடம் மனு

    • குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    • தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    பி.ஏ.பி. வெள்ளகோவில் கிளை கால்வாய் பாசன சங்கம் பகிர்மான குழு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் 4-வது மண்டலத்தில் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. இந்த பாசனப்பகுதி கடைமடை பகுதியாக உள்ளதால் எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீர் அளவு மிகவும் குறைவாக உள்ளது. மழைபொழிவும் இல்லாததால் பாசன நிலங்கள் வறண்டு விட்டன. பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் 124 கிலோ மீட்டரில் பிரியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் ஜீரோ பாய்ண்டில் வினாடிக்கு 131 கன அடி தண்ணீர் வரவேண்டும். ஆனால் 112 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. தற்போது பாசனத்துக்கு 15 நாட்கள் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கும் தண்ணீரை மேலும் சில நாட்கள் அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும். அதுபோல் இப்போது வரும் நீரின் அளவை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×