search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிச்சாலை"

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    பின்னர் மேலகிருஷ்ணன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி யிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். சுகாதாரமான ஆய்வு உணவு வழங்கப்படுகிறதா என்ப தை பார்வை யிட்டோம். குமரி மாவட்டத்தில் 325 அரசு பள்ளிகளில் 28,330 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இது வரை எந்த புகாரும் இல்லை.

    அப்படி வாங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப் பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சந்திப்போம்.சபாநாயகர் சட்டப்பேர வையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப் பத்திற்கு ஏற்றார் போல பலமுறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. மோடி பொறுப்பேற்ற பின்பு வழக்கத் திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது அம லாக்கத் துறை சோதனை நடத்தப்படு கிறது. அமலாக்கத்துறை சோதனைகளில் 0.5 சதவீதம் மட்டுமே அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விபரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது.

    அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல். ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது இப்போது நடப்பது இல்லை. பல ஆண்டுகள் நடந்துள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சாதாரணமாக கைவிடப் பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்கு வழிச்சாலை பணி கள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கி துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது
    • மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் நினைவுபடுத்துகிறேன்.

    நாகர்கோவில் :

    விஜய் வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம் காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான 4 வழிச்சாலை பணிகள் குமரி மாவட்டத்திலிருந்து கல் மண் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் 2019 ஜூலை மாதம் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் கொரோனா தாக்கத்தினால் இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    நான் மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்று நாடாளு மன்ற உறுப்பினர் ஆன பின்னர் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து பணி களை மீண்டும் தொடங்கவேண்டும் என கோரினேன். பணிகள் தொடங்காமல் இருந்த பட்சத்தில் மீண்டும் அமைச்சரை 2022-ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர்பு கொண்டு பணிகளை தொடங்க கோரினேன்.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த பணியை செய்து வந்த நிறுவனம் இந்த பணி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இயலாமல் விலகி விட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கேள்வி எழுப்பினேன். மேலும் கவன ஈர்ப்பு கோரிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தேன். மாவட் டத்தில் மண் எடுப்பதற்கு அனுமதி கிடைக்காததால் பக்கத்து மாவட்டத்திலிருந்து மண் எடுப்பதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்த பணியை மீண்டும் தொடங்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. அதை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மண் எடுக்க கோரிக்கை வைத்தேன். தமிழக அரசு அதற்கான அனுமதி அளித்தது.

    இந்த பணியை மீண்டும் தொடங்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அதிக நிதி தேவை என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்ததை தொடர்ந்து மத்திய அரசிடம் இந்த பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து நிதியும் பெறப்பட்டது.

    கடந்த வருடம் நவம்பர் மாதம் நெடுஞ்சாலை துறை இயக்குனரை சந்தித்து சாலை பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தியதின் பெயரில் டிசம்பர் மாதம் இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விடப்பட்ட பின்னரும் ஒப்பந்தம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதை கண்டு கடந்த மாதம் மீண்டும் அமைச்சரை சந்தித்து ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய கோரினேன். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி இதற்காக போராட்டம் நடத்தியது.

    தொடர் முயற்சிகளின் வெற்றியாக நேற்று குமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் 4 வழிச்சாலை பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு ஒப் பந்தக்காரருக்கு வழங்கப்பட் டது. இந்த பணிகள் விரைவில் தொடங்கும். மட்டுமல்லாமல் 4 வழிச் சாலை தாமதமாவதை கருத்தில் கொண்டு தற்பொ ழுது உபயோகத்தில் உள்ள நெடுஞ்சாலையை செப்பனிட்டு சீரமைக்க மத்திய அரசிடம் கோரி ரூ.14.99 கோடி பெற்று கொடுத்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்துகிறேன்.

    4 வழிச்சாலை பணிகளுக்காக நிலத்தை அளித்த நில உரிமையாளர்களுக்கு தகுந்த நிவாரணம் தராததை அறிந்து அதை பெற்று தரவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதா கட்சியினர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் கன்னியாகுமரி மக்களுக்கு உதவ முன்வரவில்லை. ஆனால் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில் அதற்கு உரிமை கொண்டாட ஓடி வருவது அரசியல் லாபத்துக்காக மட்டுமே.

    முன்னாள் மத்திய மந்திரி பாரதிய ஜனதா இங்கு வெற்றி பெற்றால் மட்டுமே இந்த சாலை பணிகள் இனிமேல் நடைபெறும் என்று சவால் விட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார் கள். 4 வழிச்சாலை பணி கள் தொடங்கி அதை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் முயற்சிகள் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.
    • 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சேலம்–-உளுந்துார்பேட்டை இடையிலான 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 8 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள புறவழிச்சாலைகள், இரு வழிச்சாலையாகவே உள்ளன.

    இச்சாலைகள் அகலம் குறைவாக அபாயகரமான வளைவுகளுடன் அமைந்து ள்ளதால் இச்சாலையில் பயணிப்போரிடம் 'விபத்து அச்சம்' தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, வாழப்பாடி பகுதியில் முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான 4 கி.மீ துார புறவழிச்சாலையில், போதிய எச்சரிக்கை பதாகைகள், சாலையோர மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் சாலை யொட்டிகள் அமைக்கப்படா ததால் அடிக்கடி விபத்தும், உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே, இருவழி புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புறவழிச்சாலைகளை, 4 வழிச்சாலையாக தரம் உயர்த்திட மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ் சாலைத்துறை, சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு வலியுறுத்தியது.

    இதனையடுத்து, இருவழிச் சாலைகளை 4 வழிச்சாலை யாக தரம் உயர்த்தும் பணி 3 மாதங்களாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வாழப்பாடி பகுதியில் புறவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், வருகிற மே மாதத்திற்குள் 4 வழிச்சாலையில் போக்கு வரத்து தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் வாழப்பாடி பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இணைப்புச்சாலை

    வாழப்பாடி பகுதியில் 4 வழிச்சாலை அமைப்பதால், வாழப்பாடி பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் இருந்து நீதிமன்றம் வழியாக கிழக்குகாடு குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான சாலை துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழியின்றி அவதிக்குள் ளாகியுள்ளனர்.

    எனவே, தேசிய நெடுஞ்சாலையின் தெற்கு புறம் கிழக்குக்காடு புகையி லைக்காரர் தோட்டத்தில் இருந்து தெற்கத்தியார் தோட்டம் வரையும், வடக்குபுறம் ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் இருந்து பால் கூட்டுறவு சங்கம் வரையும் இணைப்புச்சாலை அமைத்து, பால் கூட்டுறவு சங்கம் அருகில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலை சுரங்க பாலத்தோடு கிழக்குக்காடு சாலையை குடியிருப்பு பகுதியுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை.

    • அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி.வலியுறுத்தல்
    • டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே 13½ டன் எடை கொண்ட லாரிைய 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார் தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். நிகழ்ச்சியை விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா பொருளாளர் முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கண்ணனின் சாதனை மெய்சிலிர்க்க வைத்தது. இவர் இதற்கு முன் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் கண்ணன் 13½ டன் எடை உள்ள லாரியை இழுத்து சாதனை படைத்துள்ளார். அவர் குமரி மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு பிரச்சினைகளால் நடைபெறாமல் இருந்தன. இது தொடர்பாக மத்திய மந்திரியிடம் பேசி தற்போது பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் ஓரளவு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த நிலையில் நாகர்கோவில் - காவல்கிணறு சாலை முடிவுற்று தற்போது கட்டண விபரங்களும் அறி விக்கப்பட்டிருக்கின்றன .

    ஏற்கனவே நாங்கு நேரியில் டோல்கேட் இருக்கும் பட்சத்தில் 45 கிலோமீட்டருக்குள் மற்றொரு டோல்கேட் என்பது வாகன ஓட்டிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். மேலும் டோல்கேட் அமைந்துள்ள பகுதியை கடந்து நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் செல்லும்.

    இந்த வாகனங்களுக்கு எல்லாம் கட்டணம் என்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த டோல்கேட்டை திரும்ப பெற வேண்டும் . இது தொடர்பாக ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகளை பொறுத்தவரை தற்போது ஒன்றிய அரசு மிகவும் மந்தமான நிலையில் நடந்து கொள்கிறது .

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி இங்கு வலுவாக இருப்பதால் பணிகள் முடிந்தால் அந்த நற்பெயர் தங்களுக்கு கிடைக்காதோ என்ற வருத்தத்தில் பணி களை கிடப்பில் போட்டு உள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    ×