search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
    X

    கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

    நாகர்கோவில்:

    வல்லன்குமாரன்விளை அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    பின்னர் மேலகிருஷ்ணன் புதூர் அரசு நடுநிலைப்பள்ளி யிலும் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டோம். சுகாதாரமான ஆய்வு உணவு வழங்கப்படுகிறதா என்ப தை பார்வை யிட்டோம். குமரி மாவட்டத்தில் 325 அரசு பள்ளிகளில் 28,330 மாணவ-மாணவிகள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகிறார்கள். காலை உணவு திட்டம் வழங்கப்படும் பள்ளிகளில் பணம் வாங்குவதாக இது வரை எந்த புகாரும் இல்லை.

    அப்படி வாங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப் பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் கடத்தப்படுவதில் எந்த ஒரு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 சக்கரத்திற்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமவளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று கலெக்டர் தடை விதித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு மீண்டும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த விவகாரத்தை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் சந்திப்போம்.சபாநாயகர் சட்டப்பேர வையில் மரபுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது சந்தர்ப் பத்திற்கு ஏற்றார் போல பலமுறை மரபு மீறிய செயல்களை செய்துள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு ஒருபோதும் மரபுகளை மீறியது இல்லை என்பதே வரலாறு. மோடி பொறுப்பேற்ற பின்பு வழக்கத் திற்கும், நாட்டின் நடைமுறைகளுக்கும் மாறாக எதிர் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீது அம லாக்கத் துறை சோதனை நடத்தப்படு கிறது. அமலாக்கத்துறை சோதனைகளில் 0.5 சதவீதம் மட்டுமே அம லாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த புள்ளி விபரங்களே அமலாக்கத்துறையின் தவறை காட்டுகிறது.

    அமலாக்கத்துறையின் சோதனை என்பது தனிப்பட்ட நபரின் பெயரை களங்கப்படுத்தும் செயல். ஜெகத்ரட்சகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்பது இப்போது நடப்பது இல்லை. பல ஆண்டுகள் நடந்துள்ளது. அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். சாதாரணமாக கைவிடப் பட்ட திட்டங்களை எந்த அரசும் திரும்ப தொடங்கியதாக சரித்திரம் இல்லை. ஆனால் குமரியில் நான்கு வழிச்சாலை பணி கள் கைவிடப்பட்டும் உடனடியாக தொடங்கி துரிதப்படுத்தியுள்ளோம். விரைவில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், முதன்மை கல்வி அதிகாரி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×