search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளாகத்தில்"

    • கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்
    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், தோவாளை தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு வந்தது. இந்த எந்திரங்களை நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் வைக்க மின்னணு வாக்கு ப்பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டது.

    ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் கட்டிடம் கட்டுமான பணி நடந்தது. தற்பொழுது இந்த பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். தேர்தல் தாசில்தார் சுசிலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தோவாளை தாலுகா அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகள் மூலமாக அந்த எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டது.

    5,204 மின்னணு எந்திரங்களும் 3,760 கட்டுப்பாட்டு கருவியும், 2612 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 11,582 எந்திரங்களை இந்த கட்டிட த்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளத்தில் இந்த எந்திரங்கள் அனை த்தும் வைக்கப்படுகிறது. எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் 13 சி.சி.டி.வி. காமிராக்கள் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு கருவி, லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    • மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் வலியுறுத்தல்
    • மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டார்.

    கன்னியாகுமரி:

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள 75 கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்படும் வியாபாரத்தையும் பார்வையிட்டார்.

    தோவாளை பூ மார்க்கெட் வளாகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொள்ளும்போது தோவாளை மார்க்கெட் வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். வேளாண் விற்பனைக்குழு மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக் கூட்டு மையத்திலுள்ள மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் எந்திரம், கரித்தூள் தயாரிக்கும் எந்திரம், தேங்காய் பவுடர் தயாரிக்கும் எந்திரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    தென்னை மதிப்புக்கூட்டு மையத்திலுள்ள எந்தி ரங்களை இந்த மாத இறு திக்குள் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.தொடர்ந்து, செண்பகரா மன்புதூர் நேரடி கொள் முதல் நிலையத்தை பார்வை யிட்டார். கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தர விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துடன் பேசி முடிவெ டுப்பதாக தெரிவித்தார்.

    பின்னர் செண்பகரா மன்புதூரில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள சோலார் பம்ப்செட் மற்றும் சொட்டுநீர் பாசனத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் மூலம் திருப்பதிசாரம் கிராமத்தில் மண் ஆய்வுக்கூட வேளாண்மை அலுவ லர்களால் நடத்தப்பட்ட மண் ஆய்வு முகாமில் கலந்துகொண்டு மண் ஆய்வுக்கு மண் எடுக்கும் முறையை பார்வையிட்ட தோடு, மண் ஆய்வுக்கூடம், நடமாடும் மண் ஆய்வுக் கூடம், உரப்பரிசோ தனை நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

    ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சில்வெஸ்டர் சொர்ணலதா, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
    • இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் கத்தி மாறன்வளவு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 295 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமைஆசிரியராக நாகவள்ளி என்பவர் பணி புரிந்து வருகிறார்.

    இந்த பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால் மழை காலங்களில், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் மாறிவிடுகிறது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர், கடந்த வாரம் கல்வி அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளார்.

    இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக பள்ளியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டிடத்தில் வைத்து பாடம் நடத்தப்பட்டது.

    இதுபற்றி அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு தலைமைஆசிரியரிடம் வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் வாசுகி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சுமதிபாபு, ஊராட்சி மன்ற தலைவர் பெரியதாயி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், பள்ளியில் தண்ணீர் புகாதவாறு தற்காலிகமாக தடுப்பு பணி மேற்கொள்வதாகவும், மழைநீர் வடிந்த பிறகு ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து நிரந்தர கால்வாய் அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×