search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனக்காவலர்"

    • தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது.
    • 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
    • போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் திருமேடு வனச்சரகத்தில் வனக்காவலராக பணிபுரிந்தவர் இரிம்பன் குமரன் (வயது55). சம்பவத்தன்று திருச்சூர் மாவட்டம் வாழச்சல் வனப்பிரிவுக்கு உட்பட்ட கரடிப்பாரா அருகே உள்ள ஊலச்சேரி பகுதியில் புகுந்த காட்டுயானையை விரட்டும் பணியில் வனக்காவலர் குமரன், கண்காணிப்பாளர் சுனில், உள்ளூர்வாசி சனல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். அப்போது காட்டுயானை தாக்கியதில் அங்குள்ள குழிக்குள் குமரன் மற்றும் சுனில் ஆகியோர் விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குமரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×