என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லக்னோ மைதானம்"
- இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
- இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
லக்னோ:
லக்னோவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்தது. 100 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.
இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த இரு அணி கேப்டன்களும் ஆடுகளம் குறித்து அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.
20 ஓவர் போட்டிக்கு ஏற்ற ஆடுகளம் இதுவல்ல. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இது போன்று தான் இருக்கும். எனவே முன் கூட்டியே தயார்படுத்தி இருக்க வேண்டும்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது லக்னோ மைதானத்தில் கருப்பு மண் இருந்துள்ளது. அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவும். ஆனால் போட்டி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக, பிட்ச் வடிமைப்பாளரை அழைத்த இந்திய அணி நிர்வாகம், ஸ்பின்னர்களுக்கு உதவும் சிகப்பு நிற மண்ணில் பிட்ச்-ஐ உருவாக்குமாறு கோரியுள்ளனர்.
கடைசி நேரத்தில் பிட்ச்-ஐ மாற்றியமைத்த போது தான், பந்து மிக அதிகமாக ஸ்பின் ஆகும் வகையில் மாற்றிவிட்டனர். இதனால் பிட்ச்- உருவாக்கும் அதிகாரியை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது பிசிசிஐ. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்