search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா பூங்கா"

    • ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அரவேணு:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.

    தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.

    • கவர்னர் ரவி கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
    • கொடைக்கானலில் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    கொடைக்கானல்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கொடைக்கானல் வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அவர் பின்னர் கொடைக்கானலுக்கு கார் மூலம் மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

    குறிஞ்சி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோகினூர் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் விசாகன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் திலிப் உள்ளிட்ட அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன்பின் கார் மூலம் அப்சர்வேட்டரி சாலை வழியாக அப்பர்லேக் வியூ, பாம்பார்புரம் ஆகிய இடங்களுக்கு சென்றார்.

    சுற்றுலா வழித்தடத்தில் கவர்னரின் கார் சென்றதால் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அதன்பின் கோக்கர்ஸ் வாக் வழியாக பயணித்த கவர்னர் மீண்டும் ஏரிச்சாலையை சுற்றி வாகனத்தில் இருந்து எங்கும் இறங்காமல் பார்வையிட்டனர். அதன்பின் கோகினூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றடைந்தார்.

    கவர்னர் வருகையால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் வழித்தட மாற்றத்தால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். கவர்னர் வாகனம் சென்ற பிறகு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

    இன்று காலை கவர்னர் ரவி தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் ரோஜா பூங்காவுக்கு வருகை தந்தார். அங்கு பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான ரோஜா மலர்களை கண்டு பரவசமடைந்தார். அதனைத்தொடர்ந்து கொடைக்கானல் வானியல் ஆய்வு மையத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடிய கவர்னர் ஆர்.என்.ரவி புதிய வேளாண் எந்திர பயன்பாடு குறித்தும் கேட்டறிந்து அதன் செயல்முறை விளக்கம் ஆற்ற உள்ளார்.

    கவர்னர் வருகையை முன்னிட்டு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் கொடைக்கானலில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று கொடைக்கானலில் தங்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை தனது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கார் மூலம் மதுரைக்கு சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முன்னதாக கொடைக்கானலுக்கு வருகை தந்த கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து வத்தலக்குண்டுவில் கருப்பு பலூன்களை பறக்க விட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் திராவிடர் விடுதலை கட்சி மாவட்ட செயலாளர் மருத மூர்த்தி தலைமையில் அந்த அமைப்பினர் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். கொடைக்கானலிலும் கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    • மீண்டும் புத்துயிர் பெறுமா மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • சுற்று சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    ஊட்டி, பிப்.2-

    தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும்.இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு படையெடுப்பர்.

    அப்படி வருபவர்களின் முதல் விருப்பம் ஊட்டி தாவிரவியல் பூங்கா. அடுத்த இடத்தில் படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா ஆகியவை உள்ளன

    1995ஆம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ஊட்டி அரசு ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது.

    இந்த பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

    இங்கு 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்குகளை கொண்ட இந்த தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    இப்பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமாா் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

    2006-ம் ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் இந்த ரோஜா பூங்காவுக்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய நாட்டுக்கும் பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ள இப்பூங்கா, தென்கிழக்கு ஆசியா நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது.

    இத்தனை சிறப்புகள் கொண்ட சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் ரோஜா பூங்கா தற்ேபாது மெல்ல மெல்ல தன் அழகை இழந்து வருகிறது

    பூங்காவின் நுழைவு பகுதியிலேயே சாலையானது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதுதவிர பூங்காவுக்கு ெசல்லக்கூடிய சாலையில் பல இடங்களில் குழிகள் காணப்படுகின்றன.

    மேலும் பூங்காவின் சுற்று சுவரும் சில இடங்களில் இடிந்து விழுந்து உள்ளது. ஆனால் அைவ இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது.

    பூங்கா அருகே உள்ள வாகன நிறுத்தத்தின் சுற்றுசுவரும் இடிந்து விழுந்துள்ளது.

    பழைய அலங்கார் தியேட்டர் சாலையில் இருந்து ரோஜா பூங்கா வரும் நடைபாதை பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது.

    பல லட்சகணக்கான வருமானம் வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமாக உள்ள ரோஜா பூங்கா மெல்ல மெல்ல தனது பொலிவை இழந்து வருவது சுற்றுலா பயணி கள் மற்றும் உள்ளூர் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    சுற்றுலா பயணிகள் விருப்பமான இடமான ரோஜா பூங்காவை பொலிவு படுத்த வேண்டும் என்பதே ரோஜா விரும்பிகளின் விருப்பமாக உள்ளது.

    ×