ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகள் கவாத்து பணி தொடக்கம்

பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.
ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகள் கவாத்து பணி தொடக்கம்
Published on

ஊட்டி:

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அவர்கள் இங்கு நிலவக்கூடிய சிதோஷ்ண நிலையை அனுபவித்து, சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்வார்கள்.

குறிப்பாக நீலகிரி மாவட்ட த்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் இதமான கோடை சீசனை அனுபவிக்க 9 முதல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதமாக மே மாதம் 1-ந் தேதி முதல் அந்த மாதம் முழுவதும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இன்னும் சில மாதங்களில் கோடை சீசன் தொடங்க உள்ளது. இதனையொட்டி ஊட்டியில் உள்ள பூங்காக்களில் மலர்கள் நடவு செய்யும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் தொடங்கி விட்டது.

இந்த நிலையில், ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில், கோடைசீசனுக்காக பூக்களை கவாத்து செய்யும் பணி தொடங்கி உள்ளது.

கோடைசீசனையொட்டி நடக்க உள்ள ரோஜா கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள 32 ஆயிரம் ரோஜா செடிகளில், 4,201 ரோஜா ரகங்களை கொண்ட ரோஜா பூங்காவில் கவாத்து பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாதண்ணீரு தொடங்கி வைத்தார். இதில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் பூங்கா ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வரை ரோஜா மலர்கள் பூத்து குலுங்கும். அவ்வாறு பூத்துக் குலுங்கும் ரோஜா மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைய உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com