search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மேம்பால பணிகள்"

    • சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
    • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி-மதுரை அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னைக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போடி - மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே சாலையின் குறுக்கே ரெயில் பாதை செல்கிறது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசிய வாகனங்களும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை உள்ளது. எனவே இதனை தவிர்க்க நெடுஞ்சாலை த்துறை சார்பில் இரட்டை வாய்க்கால் பகுதியில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இந்த பணிக்காக ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. போடி டி.எஸ்.பி. அலுவல கம் அருகே தொடங்கி மத்திய அரசின் நறுமண ப்பொருள் வாரிய அலுவல கம் வரை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படு த்தும் பணிகள் முடிவடைந்து ராட்சத கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மதுரை கோட்ட தேசிய நெடு ஞ்சாலை பொறியாளர் முருகன், தேனி உதவி கோட்ட தேசிய நெடுஞ்சா லை பொறியாளர் ரம்யா, போடி சரக உதவி கோட்ட பொறியாளர் பிரவீன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பணிகள் மேற்கொள்ளும் போது வாகனங்கள் சென்று வர உரிய ஏற்பாடுகள் செய்யவும் பணிகளை தரமாக மற்றும் விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    • வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
    • வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம் ஆகிய 3 இடங்களில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள், நோயாளிகள், முதியவர்கள், ஊன முற்றவர்கள், ரெயில் பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    சென்னை- அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.

    இதன் காரணமாக திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.

    இதனால், வேப்பம்பட்டு பகுதியில் இருந்து பெருமாள்பட்டு, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், ரெயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்டவை மூலம் குறித்த நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணியிடங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக ரெயில்வே கேட் பாதை அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்தது.

    இதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன.

    ரெயில்வே கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது.

    பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வேப்பம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

    அந்த வழக்கு விசாரணை அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மேம்பால பணி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கை வாபஸ் பெற்றனர். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.

    இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது.

    இப்படி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறாமல் பாதியாக அந்தரத்தில் நிற்கிறது.

    இதேபோல் செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டே அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணியை 2 ஆண்டுக்குள் ரெயில்வே நிர்வாகம் முடித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் மாநில நெடுஞ்சாலைத் துறையால் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

    அப்பணியில் ரெயில்வே பாதையின் ஒரு புறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது. மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்தின் உரிமையாளர்கள் கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வந்தும் நெடுஞ்சாலைத் துறை இன்னும் மேம்பால பணியை தொடங்காமல் உள்ளது.

    இதே போல் பட்டாபிராம் வழியாக சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 2010-11-ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் நான்கு வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதற்கிடையே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

    இதனால் ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது. இதன்படி திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    இதனால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ. தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் மற்றும் பயண நேரமும் அதிகரிக்கிறது. ஆண்டுகள் உருண்டோடினாலும் மேம்பால பணி இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் மற்றும் திருப்பூர் வஞ்சிபாளையத்தில் கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலம் பணியினை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம் கட்டுப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டு அரங்கில் தரை தளத்தில் உபகரண அங்காடி அறை, உடற்பயிற்சி அறை, பணியாளர்கள் அறை, விளையாட்டு வீரர்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் சுமார் 1050 நபர்கள் அமரும் வசதியுடன் பார்வையாளர்கள் அரங்கமும், மாற்றுத்திறனாளிகள் முதல் தளம் சென்று வருவதற்கு தனியாக சாய்தளம் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 400 மீட்டர் அளவில் ஓடுதளமும், கால்பந்து மைதானமும் திறந்த வெளி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, திருப்பூர் - சோமனூர் செல்லும் சாலையில் இருந்து சிக்கண்ணா கல்லூரி செல்லும் சாலையில் திருப்பூர் - வஞ்சிபாளையம் ெரயில்வே நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டு வரும் ெரயில்வே மேம்பாலப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வின் போது, உதவிக்கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை (நெடுஞ்சாலை திட்டங்கள்) மல்லிகா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் சுரேஷ், ஈஸ்வரமூர்த்தி, பொதுபணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துசரவணன், உதவி பொறியாளர் சத்தியராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • திருத்தங்கல், சாட்சியாபுரம் ரெயில்வே மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    • ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    மதுரையில் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தியதாவது:-

    விருதுநகர்-செங்கோட்டை ெரயில் பாதையில் திருத்தங்கல் மற்றும் சாட்சியாபுரத்தில் ெரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ெரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையின் மதிப்பீடு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவ தாகவும் அது முடிந்த பின் விரைவுபடுத்தப்படும் என்றும் ெரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு காரைக்குடி, மானாமதுரை வழியாக வாரம் 3 முறை மற்றொரு ெரயில் இயக்கப்பட உள்ளதாகவும், ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வாய்ப்பு இல்லை என்றும் அதில் கூடுதல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.

    நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூர் மற்றும் திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும், கொல்லம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும் நடவடிக்கை கோரியதற்கு சிவகாசியில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்றும், நாகர்கோவில்- தாம்பரம் எக்ஸ்பிரஸ் ெரயில் சாத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தினசரி ரெயில் செங்கோட்டை-சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு புதிய ெரயில், ஐதராபாத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ெரயில் வசதி, குருவாயூர்-புனலூர் ெரயில் மதுரை வரை நீட்டிப்பு, புதுச்சேரி- கன்னியாகுமரி பயணிகள் ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான கூடுதல் ெரயில் வசதி தொடர்பான கோரிக்கை களுக்கு ெரயில்வே வாரியம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

    ×