search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயிலை"

    • கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்
    • வணிகர்களுக்கு உரிய இழப்பீடு, ஓய்வூதியம் வழங்கவும் தீர்மனம்

    கோவை,

    கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார்.

    பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும்,

    இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வலியுறுத்துவது, தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.
    • மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது.

    கன்னியாகுமரி:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், இந்தியாவில் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப்புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது.ஆனால் மங்களூர் மற்றும் கொங்கன் பகுதியிலிருந்து கன்னியாகுமரிக்கு ஒரு நேரடி ரயில் சேவை கூட இல்லாதது வேதனை அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பக்தர்கள், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள 3 முக்கிய கோவில்களான கொல்லூர் முகாம்பிகை கோவில், சிருங்கேரி சாரதா கோவில் மற்றும் தர்மஸ்தலாவுக்கு சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால் கன்னியாகுமரியிலிருந்து ரயில் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அதே நேரத்தில் திருவனந்தபுரம்-மங்களூர் இடையே தினசரி 3 இரவு நேர ரயில்கள் (16629/16630, 16603/16604 மற்றும் 16347/16348) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுரி மாவட்ட மக்கள் திருவனந்தபுரம் வரை பஸ்சில் பயணம் செய்து அங்கிருந்து ெரயிலில் பயணம் செய்கின்றனர்.

    இந்த 3 ெரயில்களில் திருவனந்தபுரம் - மங்களூர் விரைவு ரயிலை (16347/ 16348) மட்டும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்படும் போது, கன்னியாகுமரியிலிருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையிலும் மங்களூரிலிருந்து புறப்பட்டு வருகின்ற ரெயில், சூரிய உதயத்தை காண்பதற்கு ஏதுவாக காலை 6 மணிக்கு முன்பாக கன்னியாகுமரி வந்து சேரும் வகையிலும் இயக்கப்ப டவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×