என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ருத்ராஜ் கெய்க்வாட்"
- இந்திய பந்து வீச்சாளர் சஹல் 4 ஓவரில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் கெய்க்வாட் 57 ரன்னும், இஷான் கிஷன் 54 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 31 ரன் எடுத்தார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. கேப்டன் பவுமா 8 ரன், ஹென்ரிக்ஸ் 23 ரன், பிரிடோரியஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
வான் டெர் டுசன் ஒரு ரன்னில் வெளியேறினார். கிளாசன் 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
- இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.
கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.
கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.
ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.
இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.
இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்