search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவம் அதிரடி"

    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் இன்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. 
    ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து ராணுவம் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இன்னும் அவர்கள் அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்து கொண்டு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்கு கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் அங்கு ராணுவம் அதிரடியாக சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் தொடுத்தது. இந்த அதிரடி தாக்குதலை எதிர்பார்க்காத ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிலை குலைந்து போயினர்.

    இதன் முடிவில் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடவில்லை.
    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 5 பேர் பலியானார்கள்.
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் பலியாகினர். மேலும் பயங்கரவாதிகளின் 8 குகைகள் நிர்மூலமாக்கப்பட்டன. 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 6 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெகரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.



    இதையடுத்து இன்று அதிகாலையில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருந்த வனப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில்  தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    அப்பகுதியில்  மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  #JKEncounter

    ஆப்கானிஸ்தானில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். #Afghan #NationalDefense #SF #Afghanelectionrally
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை தவிர ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்பட பல்வேறு பயங்கரவாத இயக்கங்களும் அங்கு காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்கான் ராணுவம் போராடி வருகிறது.

    இந்த நிலையில் ஆப்கான் தேசிய ராணுவப்படையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தினர்.



    அதே சமயம் 120 போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல்களை நடத்தின.

    ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடி நடவடிக்கையில் 24 மணி நேரத்தில் நாடு முழுவதிலும் 68 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இவர்களில் 42 பேர் தரைவழி தாக்குதலிலும், 26 பேர் வான்தாக்குதலிலும் கொல்லப்பட்டதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் 21 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும், 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.  #Afghan #NationalDefense #SF 
    ×