search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமான ஒப்பந்தம்"

    ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு உச்ச அதிகாரம் கொண்ட தலைவரின் கைப்பாவைகள் மிரட்டல் விடுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #RafaleDeal #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசுகையில், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் பொய் சொல்கிறார்கள் என்றார். 

    ஒப்பந்த விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை குறிப்பிட்டு, ரபேல் போர் விமானங்களை பராமரிக்க மோடியின் நண்பருக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.



    இவ்விவகாரத்தில் அரசை கார்னர் செய்யும் காங்கிரஸ், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “ரபேல் போர் விமானம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு பின்வாங்குங்கள், இல்லையெனில் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று உச்ச தலைவரின் கைப்பாவைகளிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

    சில தைரியமான செய்தியாளர்களால் நான் மிகவும் பெருமையடைகிறேன், அவர்கள் இன்னும் உண்மையை சார்ந்து நிற்க வேண்டும், மிஸ்டர் 56 இஞ்ச்க்கு எதிராக நிற்க வேண்டும் என்பதில் தைரியமாக உள்ளனர்” என மோடியை மறைமுகமாக தாக்கி ட்வீட் செய்துள்ளார்.
    ×