என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யுகாதி பண்டிகை"
- யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர்.
- சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்ட பாகுபலி விருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதியவர் ஒருவருக்கு இதே போன்ற ஒரு விருந்தை வைத்து அவருடைய பேரன்கள் அசத்தியுள்ளனர். ஏலூர் மாவட்டம் பட்டயக்குடம் அருகே உள்ள மர்லகுடெம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் நாக சூர்யா.
இவர் முதல் முறையாக அவருடைய பேரன்கள் வீட்டிற்கு சென்றார். யுகாதி பண்டிகையான நேற்று முதியவருக்கு அசத்தலான விருந்து வைக்க அவருடைய பேரன் பேத்திகள் முடிவு செய்தனர். 108 வகையான உணவுகளை தயார் செய்தனர்.
ரொட்டிகள், இனிப்பு, பழங்கள், பல்வேறு வகையான உணவு வகைகள், மீகடா, மோர், ஹாட்ஸ் கேக், பழ வகைகள், உலர் பழங்கள், பிஸ்கட், சாக்லேட்டுகள், சர்க்கரை பொங்கல், புளியோதரை, பூரி உள்ளிட்ட 108 வகையான பிரம்மாண்ட பாகுபலி உணவுகளை பரிமாறினர்.
இதனை ருசி பார்த்த முதியவர் மகிழ்ச்சியடைந்தார். விருந்து முடிந்ததும் முதியவரிடம் அவருடைய பேரன் பேத்திகள் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர்.
சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்த முதியவர் அவருடைய பேரன் பேத்திகளை மனமார வாழ்த்தினார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்