search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளை"

    • வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும்.
    • வாகனத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது பெற்றோரின் கடமை.

    குனியமுத்தூர்,

    பொதுவாக நம் நாட்டில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு, 18 வயதிற்கு மேல் தான் அனுமதி என்று வட்டார போக்குவரத்து அலுவலகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    18 வயது பூர்த்தி அடைந்த பிறகு லைசென்ஸ் பெற்ற பின்பு தான் சாலையில் வாகனத்தை ஓட்ட முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தனது இருசக்கர வாகனத்தை 18 வயதுக்கு கீழ் உள்ள தனது மகள் மற்றும் மகனிடம் கொடுத்து ஓட்ட வைத்து அழகு பார்க்கின்றனர்.

    இதற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    சாதாரணமாக சிறுவர்களிடம் வண்டியை கொடுத்து ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பெற்றோர், என் பிள்ளை எப்படி வண்டி ஓட்டுறான் பாரு? என பெருமைப்பட பேசுவார்கள். ஆனால் அதுவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பு. முதலில் தெருக்களில் வண்டியை ஓட்டும் சிறுவன், பெற்றோர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மெயின் ரோட்டுக்கு செல்வான்.

    அப்படி வரும் போது விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த விபத்தால் பாதிக்கப்படுவது சிறுவன் மட்டுமல்ல. எதிர்வரும் வாகனத்தையும் பாதிக்கும்.

    எனவே இதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தை ஓட்டும் சிறுவர்களை பிடித்து, அவர்களது பெற்றோரை அழைத்து அபராதம் விதிக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.பெற்றோர்கள் விழிப்புணர்வுடன், பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    அந்தந்த பருவம் வரும்போது அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வாகனத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்குவது பெற்றோரின் கடமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • கார்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது

    புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி முத்து விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (36). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

    இவர் சம்பவத்தன்று டானா புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் டீ குடிக்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்குள் சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதி அம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் சந்த கடை பகுதி அருகே புளியம்பட்டி போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார்.

    அவரை விசாரித்ததில் அவர் அந்தியூர் அடுத்த செம்புளி ச்சாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (27) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கதிரேசனிடம் இருந்து திருடி வந்த மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் பறி முதல் செய்யப்பட்டது. 

    ×