search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிளில் இருந்து"

    • பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமையாள் (80). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூதாட்டி ராமையாள் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ராமையாள் உறவினர் பிரதீப்குமாருடன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பிரதீப்குமார் வண்டியை ஓட்ட பின்னால் ராமையாள் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பச்சைமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமையாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.
    • சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வாய்க்கால்புதூரை சேர்த்தவர் உதயகுமார் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை உதயகுமார் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெப்பிலி-அய்யம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது புதுவலசு பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் ரோட்டில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி உதயகுமார் இறந்து விட்டார்.

    இதுகுறித்து உதயகுமாரின் மனைவி நிர்மலா (35) கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் முகேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பவானி:

    பவானி அருகே உள்ள ஒலகடம் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (32). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளை யத்தில் உள்ள ஒரு கம்பெனி யில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் இவர் வேலை முடிந்து இரவு குமாரபாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கி ளில் ஒலகடம் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அவர் மயிலம்பாடியில் இருந்து ஒலகடம் செல்லும் ரோடு சடையக் கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து நிலை தடுமாறினார்.

    இதனால் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு இடங்க ளில் பலத்த அடிப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×