search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman dies after"

    • பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சோலார் புதூர் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கண்ணன், காளிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தொட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி சின்ன ராசாத்தி (52). கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபன் என்பவருடன் மொபட்டில் சின்ன ராசாத்தி சென்று கொண்டு இருந்தார். அவர்கள் கோபிசெட்டி பாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன ராசாத்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×