search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "being hit by an"

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சோலார் புதூர் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கண்ணன், காளிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×