search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மொபட் மீது லாரி மோதி பெண் பலி
    X

    மொபட் மீது லாரி மோதி பெண் பலி

    • கோபிசெட்டிபாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தொட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி சின்ன ராசாத்தி (52). கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபன் என்பவருடன் மொபட்டில் சின்ன ராசாத்தி சென்று கொண்டு இருந்தார். அவர்கள் கோபிசெட்டி பாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன ராசாத்தி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×