search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி பிரசாரம்"

    உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதற்கு பாஜகவுக்கு மீண்டும் ஆதரவு அளிக்கும்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். #ModiCampaign #LokSabhaElections2019
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்து உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் கேட்டேன். என் மீது மிகுந்த அன்பு செலுத்தி ஆதரித்தீர்கள். இந்த அன்பையும் ஆசீர்வாதத்தையும் திரும்ப தருவதாக கூறினேன். நான் செய்த பணிகள் தொடர்பான அறிக்கையை உங்கள் முன் வைப்பதாகவும் கூறினேன்.

    உங்களின் ஆதரவினால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டோம். நாங்கள் செய்த பணிகளை மக்களுக்கு தெரிவிக்கிறோம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ததையும், செய்யாதவற்றையும் எடுத்துக் கூறுகிறோம். நாங்கள் வளர்ச்சிகான பாதையில் செல்கிறோம். ஆனால், மற்றவர்களிடம் அதற்கான கொள்கை எதுவும் இல்லை.

    இதனை கணக்கில் கொண்டு, வரும் தேர்தலில் யாரை பிரதமராக தேர்வு செய்யவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மோடி அரசுதான் மீண்டும் வரப்போகிறது என மக்கள் நினைத்துவிட்டனர். இங்கு திரண்டிருக்கும் மக்களே அதற்கு சாட்சி.



    இரண்டாவது முறை எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்ற எங்களுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ModiCampaign #LokSabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி மேற்கு வங்காளம் மாநிலம், மிட்னப்பூர் பொதுக்கூட்டத்தில் நாளை பேசுகிறார். #Moditoaddress #Midnaporerally
    கொல்கத்தா:

    பாராளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த 50 பொதுக்கூட்டங்கள் மூலமாக 100 முதல் 150 பாராளுமன்ற தொகுதிகளில் வாழும் வாக்காளர்களை கவர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலும் சில பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன,

    இதன் ஒருகட்டமாக நேற்றும் இன்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அசாம்கர், வாரணாசி, மிர்சாப்பூர் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ஷாஜஹான்பூர் பகுதியில் விரைவில் பேசவுள்ளார். 

    நாளை மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வருகைதரும் பிரதமர் மோடி, மிட்னப்பூர் மாவட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது, மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு 2  எம்.பி.க்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்வரும் தேர்தலில் அதிகமான உறுப்பினர்கள் வெற்றிபெற மோடியின் பிரசாரம் கைகொடுக்கும் என அம்மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் கருதுகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து நாளை பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் மிட்னப்பூர் வரும் மோடி, மிட்னப்பூர் கல்லூரி திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மோடியின் வருகையை முன்னிட்டு மிட்னப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுக்காப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #Moditoaddress #Midnaporerally 
    ×