search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைக்கேல் புயல்"

    அமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. #HurricaneMichael #Michaelkills30
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. 

    அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த  ‘மைக்கேல்’ அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியது. 

    பின்னர், வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜார்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #HurricaneMichael #Michaelkills30 
    அமெரிக்காவில் புளோரிடாவுக்கு பின்னர் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலின் சீற்றத்துக்கு 11 பேர் உயிரிழந்தனர். #StormMichael #deathtoll
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    அவ்வகையில், புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் நேற்று புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் இன்று நுழைந்த  ‘மைக்கேல்’ புயல் இங்கும் பெரும்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இம்மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இங்குள்ள சுமார் 1200 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7 மணி நிலவரப்படி புயல் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #StormMichael #deathtoll
    அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது. #HurricaneMichael
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் புயல் மையம் கொண்டு இருந்தது. அந்த புயலுக்கு ‘மைக்கேல்’ என்று பெயர் சூட்டி இருந்தனர்.

    அது, புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு அமெரிக்காவை புயல் தாக்கியது.

    முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியது. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.

    அத்துடன் பலத்த மழையும் பெய்தது. சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்து வந்தன. இதனால் பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

    மழைநீர் மற்றும் கடல் நீரால் புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

    பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள்.

    லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


    அமெரிக்காவில் மரத்தினால் கட்டப்பட்ட வீடுகள் அதிகமாக உள்ளன. சூறை காற்றினால் இவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன. பல வீடுகளை சூறாவளி காற்று முற்றிலும் இழுத்து சென்று விட்டது.

    கடலில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகள் கொந்தளிப்பில் சிக்கி கரைக்கு இழுத்து வரப்பட்டன. அவற்றில் பல படகுகள் உடைந்து சேதம் அடைந்து ஆங்காங்கே கடலில் மிதக்கின்றன.

    புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு கூறி உள்ளது.

    மின்சாரம் இல்லாததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தவித்து வருகிறார்கள். புயல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை மற்றும் புயலில் சிக்கி 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

    கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவை தாக்கியதில் இதுதான் அதிசக்தி வாய்ந்த புயல் என்று நிபுணர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து புயல் நிலப்பரப்புக்குள் பயணித்து வருகிறது. இதனால் இன்றும் பல பகுதிகளில் இதன் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்து உள்ளனர். #HurricaneMichael
    அமெரிக்காவை அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ள நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #HurricaneMichael
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடர்ந்து புயல் தாக்கி வருகிறது. அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் இருந்து இதுவரை 12 புயல்கள் தாக்கியுள்ளன.

    இந்த நிலையில் 13-வதாக மீண்டும் ஒரு புயல் உருவாகி உள்ளது. மைக்கேல் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது. இது புளோரிடாவை நோக்கி நெருங்கி வருகிறது.

    மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.

    2 முதல் 7 செ.மீட்டர் வரை மழை பெய்தது. தற்போது உருவாகியுள்ள மைக்கேல் புயல் காரணமாக மணிக்கு 12 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. பலத்த மழை கொட்டுகிறது. 28 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

    இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.



    டல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது. #HurricaneMichael
    ×