என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முற்பிறவி"

    • சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.
    • துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

     1. கர்ணன்-சூரியன் அம்சம் அல்லது சூரிய அவதாரம்.

    2. அர்ஜுனன் - இந்திரன் அம்சம் அல்லது நரன்.

    3. பீஷ்மர்- பிரபாசன் (அஷ்டவசுகளில் இறுதியானவர்).

    4. கிருபர்-சிவனின் ருத்திரர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    5. சகுனி-துவாபர யுகமே சகுனியாக பிறந்தது.

     6. சாத்தியகி-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    7. துருபதன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    8. கிருதவர்மன்- தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    9. விராடன்-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    10. திருதிராஷ்டிரன்-ஹம்சன் என்னும் கந்தர்வராஜன்.

    11. பாண்டு-தேவர்கள் சப்தமருதர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்.

    12. விதுரர்-தர்மதேவதையின் அம்சம்.

    13. துரியோதனன்-கலியுகமே துரியோதனனாய் பிறந்தது.

    14. துச்சாதனன் முதலிய தம்பிகள்-புலஸ்தியர் புத்திரர்களாகிய அரக்கர்கள்.

    15. துரோணர்-பிரகஸ்பதி அவதாரம் (குரு பகவான்).

     16. தர்மன்-யமதர்மன் அம்சம்.

    17. பீமன்-வாயு பகவான் அம்சம்.

    18. அஸ்வத்தாமன் -சிவன் மற்றும் யமன் காமம் மற்றும் கோபத்தில் உருவானவன்.

    19. நகுலன் சகாதேவன் - அஸ்வினி தேவர்கள் அம்சம்.

    20. அபிமன்யு-வர்சஸ் (சந்திரன் மகன்).

    21. பிரதிவிந்தியன், சுகஸோமன், ஸ்ருதகீர்த்தி,சதானிக்கன் கருதசேனன். (பாஞ்சாலி புதல்வர்கள்)- விஸ்வதேவர்கள் கூட்டத்தை

    சேர்ந்தவர்கள்.

     22. பலராமன்-ஆதிசேஷன் அவதாரம்.

    23. கிருஷ்ணன் - விஷ்ணு அவதாரம்.

    24. பரசுராமன்- விஷ்ணு அவதாரம்.

    25. ருக்மணி- லட்சுமி அவதாரம்.

    26. பிரத்தியும்னன் (கிருஷ்ணன் மகன்)- சனத்குமாரர்.

    27. பாஞ்சாலி - நளாயினி.

    28. குந்தி- சித்தி என்னும் தேவஸ்ரீ.

    29. மாதிரி- த்ரிதி என்னும் தேவஸ்ரீ.

    30. காந்தாரி- மதி என்னும் தேவதை.

     31. திருசியுத்தமன்- அக்னியின் ஒரு அம்சம்.

    32. ஜராசந்தன்- விபிரஜித் என்னும் அரக்கர்கள் தலைவன்.

    33. சிசுபாலன்- ஹிரண்யகசிபு.

    34. சல்லியன்- பிரகலாதன் தம்பி ஹம்சலாதன்.

    35. திருஸ்தகேது (சிசுபாலன் மகன்)- பிரகலாதன் தம்பி அனுகலாதன்.

    36. பகதத்தன் (நரகாசுரன் மகன்)- பாஷ்கலங் என்னும் அரக்கர் தலைவன்.

    37. உக்கிரசேனன்- சொர்ணபானு என்ற அரக்கன்.

    38. பக்லிகன் (பீஷ்மர் பெரியப்பா) - அகர்னன் என்னும் அரக்கமன்னன்.

    39. ருக்மி, ஏகலைவன், ஜனமேஜயன்- கீர்த்தவரசர்கள் என்னும் அரக்கர் கூட்டம்.

    40. கம்சன்-காலநேமி என்னும் மாபெரும் அரக்கன் (ராமாயணத்தில் வருவான்).

    41. சுபத்திரை- விஷ்ணு மனதில் தோன்றிய யோக மாயை.

    42. சிகண்டி- (அம்பை) அதற்கு முன் அரக்கன்.

    43. சாந்தனு-100 ராஜசூய யாகம் செய்த மஹாபிஷக்

    • ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.
    • யாகத்தினால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது சிறப்பு.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாகம் நடந்தது.

    இந்த நாளில் விரதம் இருந்து சிவ பெருமான் வழிபாடு மற்றும் சித்தர் பீடங்களில் யாகம் செய்வதால் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் கூட நீங்கும் என்பது சிறப்பு.

    அதோடு செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலமாகும்.

    நாகூரில் எழுந்தருளி யுள்ள காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் புரட்டாசி மாத பவுர்ணமி யாக பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த யாக பூஜையினை வழக்கறிஞர் முத்துகுமரசாமி மற்றும் அவரது சகோதரி நீலாயதாட்சி ஆகியோர் செய்தனர்.

    இந்த யாகத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேயர் மடத்தின் பூஜகர் வெங்கட்ராமன் ஆகியோர் செய்தனர்

    இந்த புரட்டாசி மாத யாகத்தை காங்கேய சித்தர் ஜீவ பீடத்தை நிர்வகித்து வரும் காங்கேய சித்தர் அறக்கட்டளை சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    ×