search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முறுக்கு"

    • கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.
    • சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும்.

    கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் இனிப்பு சீடை, முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிகமுக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம். கிருஷ்ண சீடை நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு- ஒரு கப்

    வெல்லம் - 100 கிராம்

    எண்ணை - ஒரு கப்

    ஏலக்காய் பொடி- சிறிது

    உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

    வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி

    செய்முறை

    உளுத்தம் பருப்பு வெறும் கடாயில் வறுத்து அதனை மிக்சியில் போட்டு தூளாக்கிக் கொள்ளவும். கடாயில் அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு சிறிய டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு காய்ச்சவும். இதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பாகு பதம் அல்லாமல் வெல்லம் நன்கு கரைந்திருந்தாலே போதும் இறக்கி விடலாம். ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் அரிசி  போட்டு அதில் வெல்லத்தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறவும். அதில் எள் மற்றும் உளுத்தம் மாவையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் வாணலியில் எண்ணை ஊற்றி சூடாக்கி, உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பிரித்து எடுக்கலாம். இதுதான் கிருஷ்ண சீடை.

    ×