search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் படை வீரர்கள்"

    • தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
    • .பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்படிப்பு மற்றும் தொழில் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. ஒரு வருடத்திற்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு ரூ.30,000 எனவும், மாணவிகளுக்கு 36,000 எனவும் வழங்கப்படுகிறது.பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்திட கடைசி தேதி 30-11-2023 ஆகும்.

    மேலும் விவரங்கள் அறிந்திட திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0421-2971127 வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாய்ப்பினை முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பயன்படுத்தி கொண்டு 30-11-2023-க்குள் www.ksb.gov.in என்ற கே.எஸ்.பி., இணையதளத்தில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.   

    • சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நல சங்கம் மற்றும் தமிழக ஒருங்கிணைந்த பட்டாளம் சார்பில் சுதந்திர தின விழா தருமபுரி முன்னாள் படை வீரர்கள் நல உதவி மையத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் லெப்டினன்ட் கர்னல் தியாகராஜன் தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவில், லெப்டினன்ட் கர்னல் சேரன் செங்குட்டுவன், கவுரவ தலைவர் உமாபதி, மாவட்ட தலைவர் நரசிம்மன், செயலாளர் புகழேந்தி, தமிழக ஒருங்கிணைந்த பட்டாள அமைப்பின் மாநில செயலாளர் வையாபுரி, செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், சேகரன், சோமசுந்தரம், முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் நாளை மாலை 4 மணிக்கு முன்னாள் படை வீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை ) மாலை 4 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்க ளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம்.

    இரண்டு பிரதிகளில் மனுக்களை தங்கள் அடையாள அட்டையுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×