search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக்கிய குற்றவாளி கைது"

    • முக்கிய குற்றவாளியான பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.
    • திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து அந்தியூர் பவானி சாலையில் உள்ள சாந்திய பாளையம் பிரிவு மயான பகுதியில் போலீசார் ஆய்வு செய்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 7 பேர் கொண்ட கும்பல் அந்த பகுதியில் நின்று கொண்ட இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

    போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் சிக்கனர். அவர்கள் 5 போலீசார் கைது செய்து பவானி சிறை யில் அடைத்த னர்.

    இதில் முக்கிய குற்ற வாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி சந்தியபாளையம் மண க்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றவாளியான ஆப்பக்கூடல் பகுதியை சேர்ந்த பாலாஜி கைது செய்யப்பட்டு பவானி சிறையில் அடைக்கப்பட்டார்.

    மற்றொரு குற்றவாளியான சந்திய பாளையம் மணக்காடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி தலைமறைவாக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அந்தியூர் போலீசாருக்கு திருமூர்த்தி அந்தியூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தது. இதனை அடித்து சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திரு மூர்த்தியை இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×