search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்வளம்"

    • வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
    • பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் இணைந்து ஆண்டுதோறும் 20 மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடு த்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படு த்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்து றையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை கடலூர் மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவல கங்களில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்தி ட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கடலூர் , உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், கடலூர்அலுவலகங்களை நேரில் தொடர்பு கொ ள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • காவிரி கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    கும்பகோணம்:

    அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் உள்நாட்டு மீன்வளம் அதிகரிக்க செய்தல் திட்டம் சார்பில் 40,ஆயிரம் மீன் குஞ்சுகளை அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

    திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி கொள்ளிடம் ஆற்றில் 40 ஆயிரம் நாட்டு இன மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது.

    அழிவின் நிலையில் உள்ள நாட்டு மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிர்கால், சேல் கெண்டை, கல்பாசு போன்ற நாட்டு மீன் குஞ்சுகள் விடும் பணி காவிரி கொள்ளிடம் ஆற்றில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.

    இதுகுறத்து அரசு கொறடா கோவி.செழியன் பேசியதாவது:-

    இந்த திட்டத்தின் மூலம் ஆற்றில் நாட்டின மீன் உற்பத்தி ஆண்டிற்கு 20 டன் கூடுதலாக உற்பத்தியாவதற்கு வாய்ப்பு உள்ளது.இப்பகுதியில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவ ர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொது மக்களுக்கு நாட்டின மீன்கள் கிடைக்கப் பெறுவதற்கு வழி வகுப்போடு, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள நாட்டின மீன்களை பாதுகாப்பதற்காகவும், இத்திட்டம் செயல்படுத்த ப்படுகிறது.

    மேலும் கல்லணையில் இருந்து காவேரி அரசலாறு தலைப்பு வரை 205 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லும் காவிரி வெண்ணாறு, வெட்டாறு ஆற்றில் ஒரு கி.மீ. தூரத்திற்கு 2000 நாட்டு மீன் குஞ்சுகள் என 205 கி.மீட்டருக்கு 5 லட்சத்து நாட்டின மீன் குஞ்சுகள் விடப்பட்டன. என்று தெரிவித்தார்.

    முன்னதாக ராமலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு மீனவர்களுக்கு அடையாள அட்டை மீன் உரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நாகப்பட்டி னம் மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி, உதவி இயக்குனர் சிவகுமார், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் கோ.க அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் உதயச ந்திரன், மிசா மனோகரன் மாவட்ட பிரதிநிதி சண்முகம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அஞ்சம்மாள் பசுபதி, மணலூர் குமார், அசோகன், அன்சாரி மற்றும் நிர்வாகிகள், மீன்வள நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடை பெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று நாகை மாவட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    மீன்வள ஏற்றுமதி மண்டலம்

    நாகப்பட்டினம் மாவ ட்டத்தை மீன்வள ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,

    தமிழ்நாடு தொழிற்சாலை 80 சதவீத வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்.

    ரெயில் மறியல்

    நீட் தேர்வு, மின் கட்டண கணக்கீடு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் திமுக அரசு நிறைவேற்ற வில்லை. மற்ற மாநிலங்களைப் போல் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நாகை திருவாரூரில் நாளை நடைபெற உள்ள ெரயில் மறியல் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்து கொள்ளும்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்து இருப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்.

    ராகுல்காந்தியின் நடைபய ணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், இந்திய அரசியலில் ராகுல் காந்தி நடைபயணம் பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவிற்கு பின்னடைவை உண்டாக்கும் என்று தனது கருத்தை தெரிவித்தார்.

    ×