search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல் கடிதம்"

    • கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது.
    • போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு கடிதம் வந்தது.

    அதில், குடியரசு தினத்தன்று (இன்று) அகமதாபாத் ரெயில் நிலையம் மற்றும் கீதா மந்திர் பஸ் நிலையம், பலியதேவ் கோவில் ஆகிய இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்படும். உங்களால் முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள் என கூறப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அதிகாரிகள் மாநகரம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த கடிதத்தில் பஸ்வான் என்ற பெயருடன் கூடிய ஒரு தொலைபேசி எண் இருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது செல்போன் 'சுவிட்ச்ஆப்' ஆகி இருந்தது.

    எனினும் அந்த நம்பரில் இருந்து கடைசியாக பேசிய இடத்தை கண்டுபிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் கடிதம் அனுப்பியது உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தை சேர்ந்த பஸ்வான் என்பது தெரிய வந்தது.

    உடனடியாக அகமதாபாத் போலீசார், உத்தரபிரதேச போலீசாரை தொடர்பு கொண்டு பேசி, மிரட்டல் கடிதம் எழுதிய பஸ்வானை பிடித்தனர்.

    விசாரணையில், மன நலம் பாதிக்கப்பட்ட அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அந்த கடிதத்தை எழுதியது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம்.
    • 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

    கோவை

    கோவை மாவட்டம் ெபாள்ளாச்சி குமரன் நகரில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வாகனங்கள் கடந்த 22-ந் தேதி சேதப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.

    ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நாங்கள் அமைதியான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம். போலீசார் எங்களுக்கு எதிரியல்ல. நாங்கள் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம். போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொள்ளவும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு ஒரு அமைப்பின் பெயரும் அதில் எழுதப்பட்டு இருந்தது.

    இந்த மிரட்டல் கடிதத்தை யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல் போலீஸ் நிலையத்துக்கு தபாலில் வந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதனை யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். 

    ×