search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க் பவுச்சர்"

    • ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது.
    • அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தனது முதல் ஆட்டத்தில் வருகிற 2-ந்தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கடைசி இடத்தை பெற்று விமர்சனத்திற்குள்ளான மும்பை அணி இந்த முறை எழுச்சி பெறும் உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.

    இதையொட்டி மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். மட்டுமல்ல, நாங்கள் எப்போது களம் இறங்கினாலும் எதிர்பார்ப்பு இருக்கத் தான் செய்யும். பல ஆண்டுகள் விளையாடி விட்ட எனக்கு இத்தகைய எதிர்பார்ப்பால் பிரச்சினை இல்லை. அது பற்றி கவலைப்படுவதும் இல்லை. கோப்பையை வெல்வதற்கு எங்களது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அது குறித்தே எல்லாநேரமும் சிந்திப்பதால் அது எங்களுக்குள் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இளம் வீரர்களுக்கு குறிப்பாக இதற்கு முன்பு ஐ.பி.எல்.-ல் ஆடாத வீரர்களுக்கு அதிக அளவில் நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. முதல்தர கிரிக்கெட் அல்லது கிளப் கிரிக்கெட்டுகளில் எந்த மாதிரி விளையாடினீர்களோ அதே போன்று இங்கு ஆடும்படி அவர்களிடம் சொல்வேன். அதில் இருந்து ஐ.பி.எல். கிரிக்கெட் வேறுபட்டது தான். ஆனாலும் அவர்களை அந்த மனநிலைக்கு கொண்டு வர முயற்சிப்பேன்.

    காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகி இருப்பது எங்களுக்கு இழப்பாகும். ஆனால் இது இன்னாரு வீரருக்கு வாய்ப்பாக அமையும். இதே அணியில் கடந்த 2 ஆண்டுகள் விளையாடும் ஓரிரு பவுலர்கள் அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக உள்ளனர். பும்ரா இல்லாததால் சில இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும் காயத்தால் விளையாட முடியாமல் போனது. அவர் எப்படிப்பட்ட பவுலர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

    மும்பை அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுகையில்:-


    முக்கியமான சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டி இருப்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு லீக் சுற்றின் போது ஓய்வு அளிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். அவர் மும்பை அணியின் கேப்டன். அவர் ஓய்வை விரும்பமாட்டார் என்று நம்புகிறேன். எதுவாகினும் சூழலுக்கு தக்கபடி முடிவு செய்வோம். ஒரு வேளை அவர் ஒன்றிரண்டு ஆட்டங்களுக்கு ஓய்வு தேவை என்று கேட்டால், ஓய்வு அளிக்கப்படும். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    வீரர்களின் பணிச்சுமை குறித்து இப்போது நிறைய பேசுகிறார்கள். எங்கள் அணிக்குரிய போட்டி அட்டவணையை பார்த்தால், ஒவ்வொரு ஆட்டத்திற்கும் இடையே ஓரளவு ஓய்வு கிடைப்பது தெரியும். அதனால் எங்கள் அணியில் வேலைப்பளு என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடும் போது உடலுக்கு கடினமாக இருக்கும். ஆனால் 20 ஓவர் போட்டி குறுகிய நேரத்தில் முடிந்து விடும். எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான பணிச்சுமை குறித்து நாம் பேசுவது தேவையற்றது.

    சூர்யகுமார் நன்றாக இருக்கிறார். அவர் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள அவரிடம் பேசினேன். அப்போது அவர் 'நான் பந்தை நன்றாக அடித்து ஆடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நான், 'பதற்றமின்றி அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஒரு வீரர் முதல் பந்தை தாண்டவில்லை என்பதற்காக அவர் நல்ல ஆட்டத்திறனுடன் இல்லை என்று சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக அவர் 3 ஆட்டங்களிலும் முதல் பந்திலேயே வெளியேறி விட்டார். ஐ.பி.எல்.-ல் அவர் முதல் பந்தை சந்திக்கும் போது, ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டமும் அவரை உற்சாகப்படுத்தும். அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். தற்போது உலகின் மிகச்சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரராக அவர் விளங்குகிறார்.

    என்று அவர் கூறினார்.

    • அர்ஜூன் காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார்.
    • பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம்.

    மும்பை:

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை.

    நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று மார்க் பவுச்சரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது:-

    காயத்தில் இருந்து அர்ஜூன் மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன்.

    எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
    • கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

    ஐ.பி.எல். போன்றே தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காண அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

    இந்நிலையில் கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பதவியில் இருந்து விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்ஸுக்குச் சொந்தமான 3 நிறுவனங்களுடனும் பவுச்சர் ஒரு லாபகரமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதால் தான் இவர் தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தென் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் கேப்டவுன் அணியின் பயிற்சியாளராகவும், 2023 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சர்வதேச லீக் டி20-ல் எம்ஐ எமிரேட்ஸ் உடன் இணைய உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார்.
    • அவர் தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை முடிவடைந்தவுடன் மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்காவின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார். அவர் தனது எதிர்கால வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ராஜினாமா செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

    பவுச்சரின் விலகல் குறித்து தென் ஆப்பிரிக்கா தலைமை நிர்வாக அதிகாரி ஃபோலெட்சி மொசெகி பேசியதாவது:-

    கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் செலவு செய்த நேரம் மற்றும் முயற்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

    அவர் செய்த பணிக்காக நாங்கள் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் அவரது தொழில் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறோம்.

    மார்க் பவுச்சர் எங்களைவிட்டு பிரிவது வருத்தமாக உள்ளது. ஆனாலும் அவரது விருப்பத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். மார்க் ஒரு ஜாம்பவான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×