search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்இறைச்சி"

    • வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் வனத்துறையினர் உலிக்கல் சுற்று வனத்தில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உலிக்கல் சுற்று புளியமரத்துக்காடு ஆற்றுப்பகுதியில் இறந்துக்கிடந்த புள்ளிமான் கறியை எடுத்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கல்லார் பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (வயது40), சிவக்குமார் (33), கரட்டுமேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (21) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து 3 பேர் மீது வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து சமைக்கப்பட்ட மான் இறைச்சியும் பட்டியலுடன் பறிமுதல் செய்தனர்.

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×