search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநல"

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளுக்குநாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி சமூகப் பணித்துறை மாணவி ஆர்த்தி வரவேற்று பேசினார்.

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையேற்று மனநலத்தை பற்றியும் மறுவாழ்வு சிகிச்சை பற்றியும் நம்பிக்கை மனநல காப்பக சேவைகள் அனைத்தையும் படும் சிரமங்களையும் விவரமாக எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார் .

    வழக்கறிஞர் கதா க. அரசு தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கை மனநலக் காப்பகத்தின் சிறப்பான சேவைகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல், கண்காணித்தல், வழிபடுத்துதல், ஆற்றப்படுத்துதல், மறுவாழ்வு செய்தல், மன சிகிச்சை அளித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

    நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நாளுக்கு நாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    அவர்களை மீட்டெடுத்தல், பாதுகாப்பு கொடுத்தல், உணவளித்தல்,

    மனநல சிகிச்சை அளித்தல் ஆற்றப்படுதல் குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் போன்றவற்றை விவரித்தார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சமூகப் பணி ஆர்த்தி பயனுள்ள நூல்களையும் பூக்கன்றுகளையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் கோகிலா, சுபா, சக்தி பிரியா, சரவணன், சங்கர், செவிலியர் சுதா, வள்ளி கலந்து கொண்டனர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் பணியாளர்களையும் சமூக பணியில் முதுகலை பட்டம் பெரும் ஆர்த்தியை பற்றியும் எடுத்துக் கூறினார்.

    • மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை துவக்கி வைத்தார்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்புடன் இணைந்து உலக மனநல நாளை முன்னிட்டு வாகன கலை நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார நிகழ்வை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துகின்றது.

    இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவி கவிதா பாண்டியன் தலைமை வகித்தார்.

    வட்டாட்சியர் ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் விதம் அவர்களை வைத்து பராமரிக்கின்ற கஷ்டம் மனநல சிகிச்சை அளிக்கும் விதம் மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை துவக்கி வைத்தார்.

    நிகழ்வில் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், லயன் சங்க தலைவர் வேதமணி, நூற்றாண்டு லயன் சங்க செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, சங்க உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    மனநல தினத்தையும் நம்பிக்கை மனநல காப்பகத்தையும் மனநல பாதுகாப்பையும் பற்றிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    மனநலத்தைப் பற்றிய மேள தாள இசை நிகழ்ச்சியுடன் பாட்டுகள் பாடி சிறு நாடகத்தின் மூலம் நடத்திய கலை நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

    மனநலத்திற்காக தொண்டுகள் செய்யும் நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் இதயம் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    பிரசார வாகனம் ஆலத்தம்பாடி, திருவாரூர் பழைய பஸ் நிலையம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, எடையூர் ஆகிய இடங்களில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி திருத்துறைப்பூண்டியில் முடிவடைந்தது.

    ×