search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளுக்குநாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி சமூகப் பணித்துறை மாணவி ஆர்த்தி வரவேற்று பேசினார்.

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையேற்று மனநலத்தை பற்றியும் மறுவாழ்வு சிகிச்சை பற்றியும் நம்பிக்கை மனநல காப்பக சேவைகள் அனைத்தையும் படும் சிரமங்களையும் விவரமாக எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார் .

    வழக்கறிஞர் கதா க. அரசு தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கை மனநலக் காப்பகத்தின் சிறப்பான சேவைகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல், கண்காணித்தல், வழிபடுத்துதல், ஆற்றப்படுத்துதல், மறுவாழ்வு செய்தல், மன சிகிச்சை அளித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

    நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நாளுக்கு நாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    அவர்களை மீட்டெடுத்தல், பாதுகாப்பு கொடுத்தல், உணவளித்தல்,

    மனநல சிகிச்சை அளித்தல் ஆற்றப்படுதல் குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் போன்றவற்றை விவரித்தார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சமூகப் பணி ஆர்த்தி பயனுள்ள நூல்களையும் பூக்கன்றுகளையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் கோகிலா, சுபா, சக்தி பிரியா, சரவணன், சங்கர், செவிலியர் சுதா, வள்ளி கலந்து கொண்டனர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் பணியாளர்களையும் சமூக பணியில் முதுகலை பட்டம் பெரும் ஆர்த்தியை பற்றியும் எடுத்துக் கூறினார்.

    Next Story
    ×