search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு பணி"

    • ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டம் மூலம் மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த விழாவில் மத்திய மந்திரிகள் இந்த ஆணைகளை வழங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

    கடந்த 2014-ம் ஆண்டில் நாடு எங்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பையும் வழங்கியபோது, முதலில் 'பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை' என்ற தாரக மந்திரத்துடன் முன்னேற ஆரம்பித்தோம்.

    திட்டங்களின் பலனை ஒருபோதும் பெறாத மக்களுக்கு அரசாங்கமே சென்றடைந்தது. பல தசாப்தங்களாக அரசிடம் இருந்து எந்த வசதியும் பெறாதவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.

    அரசாங்கத்தின் சிந்தனை மற்றும் பணி நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் நாட்டில் நம்பமுடியாத மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதிகாரத்துவமும் ஒன்றுதான், மக்களும் ஒன்றுதான். இன்னும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும், எல்லாமே மாறத் தொடங்கி இந்தியா சுறுசுறுப்பாக முன்னேறியது என தெரிவித்தார்.

    ரெயில்வே அமைச்சகம், அஞ்சல்துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.

    புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள், (https://portal.igotkarmayogi.gov.in/) எனும் இணையதளம் வழியாக, 800-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகளை படித்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    • ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி .,பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஜூலை 2023-ல் நடைபெறும். 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்விற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 24.4.2023 திங்கள்கிழமையன்று இலவச பயிற்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

    எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு பல்லடம் சாலை, திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • விருதுநகரில் மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி.எம்.டி.எஸ்., ஹவில்தார் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

    தேர்வு குறித்து மேலும் www.ssc.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 25 வரை. 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடைய அனைவரும் விண்ணப்பிக்க லாம். வருகிற 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

    இத்தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை (3-ந்தேதி) அன்று முதல் நேரடியாக நடைபெற உள்ளது.

    இப்போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×