search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central government jobs"

    • ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் பணியில் 7500 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு வாயிலான விளம்பர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 ஆகும். இத்தேர்விற்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து தெளிவு பெற்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 1.1.2023-ம் நாளன்று 18 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., அல்லது எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓ.பி.சி .,பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

    இத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வு ஜூலை 2023-ல் நடைபெறும். 1 மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்விற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.மேலும் வரும் 24.4.2023 திங்கள்கிழமையன்று இலவச பயிற்சி தொடங்கப்பட்டு தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும்.

    எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு பல்லடம் சாலை, திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 4-வது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அல்லது 9499055944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு 1-ந்தேதி முதல் வழங்கப்படும். #10PercentReservation #CentralGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்தது.

    இதுதொடர்பாக அரசியல் சாசனத்தின் 124-வது திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்ட அந்தஸ்தை பெற்றுவிட்டது.

    இதையடுத்து மத்திய அரசு வேலைகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் நடைமுறை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதுகுறித்த முறையான உத்தரவை மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை பிறப்பித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையை பெறாதவர்கள், அவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக இருக்கிறபோது அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டின் சலுகையைப் பெற அடையாளம் காணப்படுவார்கள்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, மத்திய அரசு பணிகள் மற்றும் சேவைகளில் பிப்ரவரி 1-ந்தேதி அல்லது அதற்கு பின்வரும் அனைத்து நேரடி ஆள் சேர்ப்பிலும் வழங்கப்படும்.

    மேலும் 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் சதுர அடியோ, அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீடு, 300 சதுர அடியோ அதற்கு மேலோ பரப்பளவு கொண்ட வீட்டு மனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடியோ அதற்கு மேலோ வீட்டுமனை உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
    ×