search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை பாராளுமன்ற தொகுதி"

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ‘மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடவேண்டும் என்று வாக்காளர் களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல பிற வேட்பாளர்களும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதனால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் மதுரை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் கே.கே.ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால் இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முகாந்திரம் இல்லை என்றும் மனுதாரர் வேண்டுமென்றால் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகி தேர்தல் வழக்காக அங்கு தாக்கல் செய்யலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் பாராளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது என ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது. #LSPolls #MaduraiHCBench #EC
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. அந்த நாளில் மதுரையில் பிரசித்திப் பெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம், மறுநாள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் பார்த்தசாரதி முறையீடு செய்தார்.
     
    இதனை மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தெரிவித்ததை தொடர்ந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, தமிழகத்தில் மிக முக்கியமான சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை காண 15 லட்சம் பேர் வரை மதுரையில் கூடுவார்கள். அன்றைய தினம் தேர்தல் நடத்தப்பட்டால் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். வாக்குப் பதிவு கடுமையாக பாதிக்கப்படும். எனவே அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், நாடு முழுவதும் பாதுகாப்பு காரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்து திட்டமிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க இயலாது என்றார்.



    அப்போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் குறுக்கிட்டு, மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது என்பதை தமிழக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை. இந்த விழாவின் காரணமாக மதுரை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் வாக்குகள் குறையாதா? 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? என்றனர்.

    மாற்றுத் தேதியில் தேர்தல் நடத்தலாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று நாளை மறுநாள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    இந்நிலையில், இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை பாராளுமன்ற தேர்தலை தள்ளிவைக்க முடியாது.

    கோயிலை சுற்றியுள்ள 18 வாக்குச்சாவடிகளை பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவ படையுடன் தேர்தல் நடத்த முடியும் என தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெறும் கடமைக்காக தேர்தலை நடத்த வேண்டாம். வாக்காளர்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையத்துக்கு அக்கறை இல்லையா?

    இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நாளை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர். #LSPolls #MaduraiHCBench #EC
    சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால் கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு மதுரை கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். #LSPolls
    மதுரை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதுரையில் காலை சித்திரை திருவிழா தேரோட்டமும், மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை வேறு தேதிக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    அதில், வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவின் போது 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. எனவே கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiConstituency
    ×