search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்எண்ணெய்"

    • குளிர்பானம் என்று நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலவளவு, புது சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி லட்சுமி (76). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகன் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அங்கு சமையல் அறையில் இருந்த ஒரு பாட்டிலில் நீல நிற திரவம் இருந்தது. அதனை குளிர்பானம் என்று நினைத்து அவர் குடித்து விட்டார். அதன் பிறகு தான், அது மண் எண்ணெய் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மயங்கி விழுந்த லட்சுமிைய மீட்டு மேலூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முட்டத்தில், இன்று அதிகாலை சொகுசு காரில் கடத்திச் சென்ற 1500 லிட்டர் மண்எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    களியக்காவிளை:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய் அதிகாரிகள் தினமும் வாகனச் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, முட்டம் பகுதியில் இன்று அதிகாலை தனி தாசில்தார் ராஜசேகர் தலைமையில் துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் டேவிட் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தும்படி கைகாட்டினர். ஆனால் கார், நிற்காமல் வேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த காரை துரத்திச் சென்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அம்மாண்டி விளை சந்திப்பில் காரை மடக்கிப் பிடித்தனர்.

    காரில் இருந்த டிரைவர் தப்பியோடி விட்டார். அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது, காரில் 1500 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இணையம் குடோனில் ஒப்படைத்தனர்.

    மண்எண்ணெய் கடத்திச் சென்ற காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
    ×