search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடம்"

    • இளையான்குடி வேதாந்த மடத்தில் குருபூஜை விழா நடந்தது.
    • இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வேதாந்த மடத்தில் சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் 49-வது ஆண்டு நிறைவு குருபூஜை விழா நடந்தது. இளையான்குடி வேதாந்த மடத்தை தோற்றுவித்த சிவானந்த ஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

    இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர். சிவானந்த ஞான தேசிக சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், சொர்ண அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    ×