search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து விதிகள்"

    • விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன.
    • பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகள் உள்ளன. இருந்தும் அவற்றை பின்பற்றாமல் சிலர் செய்யும் விதி மீறல்களால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாகின்றன இதனை தடுக்கும் பொருட்டு திருப்பூர் மாவட்டபோலிஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின்பேரில், பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்ட்டர் திருநாவு க்கரசு, மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருசக்கரவா கனங்களில் செல்கையில் ஹெல்மட் அணியாமல் சென்ற 434 பேர் மீதும், குடி போதையில் வாகனங்களில் சென்ற 44 பேர் உள்பட மேலும் சிக்னலை மதிக்காமல் சென்றது. நான்குசக்கர வாகனங்களில் செல்கையில் சீட பெல்ட் அணியாமல் செல்வது, அதிக பாரம் ஏற்றிச்செல்வது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய1147 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்க ளிடமிருந்து அபராதமாக ரூ.7,72,200 வசுலிக்கப்பட்டது மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்து க்கு பரிந்துரை செய்யப்பட்டு 7 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகள் 84 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • விதிமீறலில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே அபராத தொகை செல்போனில் வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
    • 100 ரூபாய் என்ற அளவில் இருந்த அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து தான் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள்.

    சென்னை:

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.100 ஆக இருந்த அபராத தொகை தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.

    போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் முக்கிய சந்திப்புகளில் நின்றபடி அபராதம் வசூலித்து வருகிறார்கள். அதேநேரத்தில் கேமராக்கள் மூலமும் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    'டிராபிக் ரெகுலேசன் அப்சர்வேஷன் மண்டலம்' என்ற பெயரில் தானியங்கி கேமராக்களே விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கம்ப்யூட்டர் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.

    இதன்படி அண்ணாநகர் பகுதியில் சுமார் 60 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேப்பேரி போக்குவரத்து போலீஸ் எல்லைக்குட்பட்ட புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் அருகில் உள்ள வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும் இந்த வகை கேமரா அமைக்கப்பட்டிருக்கிறது.

    இந்த பகுதிகளில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் அபராத தொகை ஆன்லைன் மூலமே விதிக்கப்பட்டு வருகிறது.

    விதிமீறலில் ஈடுபட்ட சில நிமிடங்களிலேயே அபராத தொகை செல்போனில் வருவதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

    ஏனென்றால் 100 ரூபாய் என்ற அளவில் இருந்த அபராத தொகை ரூ.1000-மாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைப்பார்த்து தான் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள்.

    அண்ணாநகர் பகுதியில் இந்த கேமராக்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாநகர் போலீஸ் நிலைய சந்திப்பு, ரவுண்டானா, சாந்தி காலனி சந்திப்பு, திருமங்கலம், முகப்பேர் ரோடு சந்திப்பு, 100 அடி ரோடு மற்றும் 18-வது மெயின் ரோடு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆன்லைன் அபராதம் அதிக அளவில் விதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே போலீசார் தான் இல்லையே... என்ற தைரியத்தில் சிக்னலை மீறிச்செல்பவர்கள், ஒரு வழிப்பாதையில் செல்பவர்கள், நிறுத்த கோட்டை தாண்டி நிற்பவர்கள் ஆகியோருக்கு 'ஆப்பு' வைக்கும் வகையில் இதுபோன்ற அபராதம் கண்காணிப்பு கேமராக்கள் விதித்து வருகின்றன.

    எனவே இந்த அபராத தொகையை வசூலிக்க சென்னை கமிஷனர் ஆபீசில் தனி குழுவும் ஏற்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    • சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • போக்குவரத்து விதிமீறல்களை பற்றியும் புதிய அபராத தொகை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகையை வசூலிப்பது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை இன்று தொடங்கினார்.

    இன்று காலையில் அவசரம் அவசரமாக அலுவலகங்களுக்கு சென்றவர்கள், வெளியிடங்களுக்கு சென்றவர்கள் ஆகியோரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகை தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    வேப்பேரி கமிஷனர் அலுவலக சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய போக்குவரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

    அதே நேரத்தில் அதிவேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது.

    உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை பற்றியும் புதிய அபராத தொகை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள். சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து காலை 10 மணியில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. திடீரென மோட்டா் வாகன விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவிலான தொகையை போலீசார் கேட்டதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள். ஒரு சிலர் இன்று மட்டும் விட்டு விடுங்கள் சார், நாளை முதல் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவற்றுடன் பயணிக்கிறேன் என்றும் கூறினர்.

    புதிய அபராத கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

    புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கு ஏதுவாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான கூடுதல் அபராத தொகை போக்குவரத்து கணினி சேவை மையத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்திலும் அது அப்டேட் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    ×