search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு விழிப்புணர்வு"

    • தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வங்கிக் கணக்கு எண், ரகசிய பின் நம்பர், ஆதார் எண் ஆகியவற்றை முகம் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி சைபர் கிரைம் குற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தருமபுரி மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின்பேரில் தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், ரங்கசாமி ஆகியோர் பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    வங்கிக் கணக்கு எண், ரகசிய பின் நம்பர், ஆதார் எண் ஆகியவற்றை முகம் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ள கூடாது. செல்போன் நேரடி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் ஆசையை தூண்டும் விதமாக லிங்க் இணைப்பை தொடருங்கள் என அழைப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று போலீசார் கூறினர்.

    இதனையும் மீறி பொதுமக்கள் பணத்தை இழந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கூறினர்.

    • எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தனியார் திரவநிலை எரிவாயு நிறுவனத்தின் சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி மாந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்ப ட்டுவர்களுக்கு முதலுதவி அளிப்பது, மருத்துவமனைக்கு அனுப்புவது, குறித்தும் இயற்கை எரிவாயு நிறுவன பாதுகாப்பு துறையினர், மாவட்ட தீயணைப்புத்துறை, மாவட்ட நிர்வாகம், மருத்துவ துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக் குழு தலைவர் வெங்கட்ரமணன், ராணிப்பேட்டை நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, எரிவாயு நிறுவன மண்டல தலைவர் வெங்கடேசன், முதுநிலை பாதுகாப்பு பொறியாளர் தாமோதரன், அலுவலர்கள் பாலாஜி, இசக்கி ராஜாராம்,சுரேஷ்,ரவிதேஜா,தீயணைப்பு நிலை அலுவலர் பாலாஜி, மாந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
    • தீயை அணைப்பது குறித்து விளக்கம் அளித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் கோட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி உத்தரவின் பேரில் குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குடியாத்தம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் பயணிகள், பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள், ஆட்டோ ஆகியோரிடம் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகள், தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    தொடர்ந்து வீடு மற்றும் பணி செய்யும் இடங்கள், வாகனங்களில் தீப்பற்றினால் அதிலிருந்து பாதுகாப்பாக மீள்வது குறித்தும், தீயை அணைப்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர்.

    • துண்டு பிரசுரங்கள் வினியோகம்
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா வரவேற்றார்.

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் வாசுதேவ ரெட்டி, மாநில அளவிலான பயிர் காப்பீடு திட்ட அலுவலர் உஷா, மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிர் காப்பீடு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

    இதனை அடுத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய குழு உறுப்பினர் பி. ராஜா உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது.
    • கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடியாக கஞ்சா மற்றும் புகையிலை தடுப்பு வேட்டை நடைபெற்று வருகிறது. கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு பகலாக கஞ்சா மற்றும் புகையிலை விற்பவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது போன்ற நடவடிக்கையால் கோத்தகிரி பகுதியில் முன்பு இருந்ததை விட கஞ்சா மற்றும் புகையிலை பழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கஞ்சா புகைத்தலால் ஏற்படும் தீமை குறித்தும், எதிர்கால இளைஞர்களின் வாழக்கை எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை கோத்தகிரி பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதவி காவல் ஆய்வாளர் சேகர் வழங்கினார். மேலும் கஞ்சாவை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதிமொழியை அவர்களை ஏற்க வைத்தார். இதே போன்று கோத்தகிரி குஞ்சப்பனை பகுதியிலும் போலீசாரால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    • போதை பொருட்கள் பயன்படுத்துவோர், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு எது போன்ற தீங்கு ஏற்படுகிறது.

    போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும், எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வை காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் வழங்கினார். 

    • கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல்துறையின் சார்பில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம், பாளேத்தோட்டம் பிரிவு சாலை, செல்லம்பட்டி பிரிவு சாலை, 4 வழி சாலை ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.

    இதில் பாளேத்தோட்டம் பிரிவு சாலையில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு போச்சம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    இதில் கந்துவட்டி, மீட்டர் வட்டிகளுக்கு பணம் வாங்கி கூடுதல் பணம் கேட்கும் நபர்கள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    குழந்தை திருமணங்கள் நடைபெறுவது குறித்து தகவல் அறிந்தால் காவல் உதவி எண்ணிற்கும், குழந்தைகள் தடுப்பு மைய உதவி எண்ணிற்கும் அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

    பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் காவலன் ஆப்பை தங்களது செல்போனில் பதிவு செய்து அதில் உள்ள எமர்ஜென்சி பொத்தானை அழுத்தி காவல்துறையின் உதவியை எளிதில் பெற முடியும் என்ற ஆலோசனைகளை வழங்கினர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ×