search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் போராட்டம்"

    • அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.
    • ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்

    கடலூர்:

    சிதம்பரம் அருேக புவனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலா (வயது 27). இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது திருச்சிற்றம்பலம் வாயில் மூடப்பட்டிருந்தது. இதை யடுத்து வாயிலை திறக்கச் சொல்லி ஜெயசீலா அங்கிருந்த தீட்சிதர்களிடம் கூறியுள்ளார். ஆனால், உள்ளே அபிஷேகம் நடை பெறுவதால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தீட்சிதர்கள் கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெயசீலா, அபிஷேகம் நடந்தாலும் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்த துணை சுப்பிரண்டு ரகுபதி, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து ஜெயசீலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தாங்கள் நினைப்பதை எங்களுக்கு புகார் மனுவாக கொடுங்கள். 

    இது குறித்து துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அனுப்பி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்கிறோம் என்று கூறினர். இதையேற்ற ஜெயசீலா அங்கிருந்து போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.அதில் உள்ளதாவது:-

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் தினசரி ஒரு பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே பணி புரியும் தீட்சதர்கள் பணம் பெற்றுக் கொண்டு கனகசபையின் மேல் பொதுமக்களை ஏற்றுகிறார்கள். பணம் தராதவர்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்புகிறார்கள். இது தினசரி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இந்து அறநிலைத்துறையின் சார்பில் தினசரி ஒரு அதிகாரி காலை முதல் மாலை வரை கோவிலில் பொதுமக்கள் ஏறுவதற்கு கண்காணிப்புக்கு அதி காரிகள் நியமிக்கப்பட் டுள்ளனர். துறையின் சார்பில் அதிகாரிகள் வருவது இல்லை. கொரோனா காலத்திற்கு முன்பிருந்த நடைமுறைபடி பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண்பதாக கூறி ஜெயசீலாவை அனுப்பிவைத்தனர். இதனால் நடராஜர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர்.
    • வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோ ட்டையைச்சேர்ந்தவர் மீனாட்சி(வயது35) இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு சில மாதங்களில் கணவன் விட்டு விலகிச் சென்றதால், சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மீனாட்சியின் தாயார், மீனாட்சிக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்காக வரன் தேடினார். இதனை அறிந்த காரைக்காலை சேர்ந்த மரிய லூர்து ராஜ் என்பவர், தான் திருமணமாகாத நபர் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.

    அதன்பின்னர் மரிய லூர்து ராஜ், மீனாட்சியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்ததார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். அப்போது மீனாட்சி மரியலூர்துராஜிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால், மீனாட்சி காரைக்காலில் விசாரித்தார்.

    அப்போது மரிய லூர்து ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விபரம் தெரிய வந்துள்ளது. உடனே ஏமாற்றப்பட்டதை அறிந்த மீனாட்சி, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய லூர்து ராஜ், புகாரை வாபஸ் வாங்கினால், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து புகாரை மீனாட்சி வாபஸ் வாங்கியுள்ளார். மீண்டும் மீனாட்சி திருமணம் பேச்சை எடுத்தபோது, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலோ, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, கொலை செய்து விடுவதாக, மரியலூர்துராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    அதனை தொடர்ந்து, காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க சென்றார். ஆனால் புகாரை வாங்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாமதப்படுத்தியதால், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்தப்பெண்ணை சமரசம் செய்த போலீசார், மீனாட்சியின் புகாரை பெற்றனர். புகாரில், மீனாட்சி, மரிலூர்துராஜ் பழகிய புகைப்படம், வீடியோ, வாட்ஸ் அப் கால் பதிவுகள், துப்பாக்கி காட்டி மிரட்டும் படம் போன்றவற்றை ஒப்படைத்துள்ளார்.

    ×