search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் செயின் பறிப்பு"

    மதுரவாயலில் பெண்ணிடம் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்தன். இவரது மனைவி பிரத்திமா. நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வநத் 2 வாலிபர்கள் பிரத்திமா அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளைய ஆழ்வார். இவரது மனைவி பத்மாவதி. இவர் அதே பகுதியில் பால்பூத் வைத்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை பால்பூத்தை திறப்பதற்காக பத்மாவதி நடந்து சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×