search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூபேஷ் பாகெல்"

    • சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.

    சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.

    சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

    அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சத்தீஸ்கர் முதல் மந்திரியின் அரசியல் ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
    • அவரது வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில், சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதிய முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் ஆகிய ஊழல்கள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த 2 நாளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர், துர்க் ஆகிய நகரங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வந்தது.

    இதற்கிடையே, நேற்று முதல் மந்திரி பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, பூபேஷ் பாகலின் சிறப்பு அதிகாரி ஆகியோரது ராய்ப்பூர் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    துர்க் நகரில் ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் சோதனை நடந்தது. வினோத் வர்மா வீட்டில் நடந்த சோதனையின்போது, பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    எந்த வழக்குக்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட முறைகேடுகள் தொடர்பாக சோதனை நடப்பதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல் மந்திரி பூபேஷ் பாகல் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவர்களே, எனது பிறந்தநாளில், என் அரசியல் ஆலோசகர் மற்றும் சிறப்பு அதிகாரி வீடுகளுக்கு அமலாக்கத் துறையை அனுப்பி எனக்கு விலைமதிப்பில்லாத பரிசு அளித்து இருக்கிறீர்கள்.

    ராய்ப்பூரில் எங்கள் கட்சியின் தேசிய அமர்வு நடைபெற்ற போது அமலாக்கத்துறை ரெய்டுகள் நடத்தப்பட்டன. எனது பிறந்தநாளான இன்றும் சோதனை நடத்தப்படுகிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை துணை கொண்டு பா.ஜ.க. தேர்தலில் போட்டியிடுகிறது. நிரந்தரமாக ஆட்சியில் இருப்போம் என்று பாஜக நினைக்கக் கூடாது. இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இப்படியே குறிவைத்துக் கொண்டே இருந்தால் இந்த முறை 15 சீட் கூட கிடைக்காது என தெரிவித்தார்.

    ×