search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசுரங்கள்"

    • பாதுகாப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
    • 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காகுப்பத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார். முகாமில் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவும் நோய்களிலிருந்து பாது காப்பு மற்றும் பல்வேறு பொருட்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.தொடர்ந்து, கால்நடை வளர்ப்பிற்கான கடன் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறந்த கறவைப் பசு பராமரிப்பு விவசாயி 3 நபர்களுக்கும், சிறந்த கிடேரி கன்று வளர்ப்பு விவசாயி 3 நபர்களுக்கு மாவட்ட கலெக்டர் பழனி பால்கேன்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்நிகழ்வில், விழுப்புரம் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குர் தலதா, துணை இயக்குநர் பொன்னம்பலம், உதவி இயக்குநர் மோகன், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் .வேல்முருகன், கால்நடை உதவி மருத்துவர்கள் பாலாஜி, சிவா, சதானந்தன், சந்திரன், உஷாநந்தினி, கோவிந்தசாமி, சந்தியா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு பகுதியாக புது வாழ்வு அறக்கட்டளை சார்பில் நாகை மஞ்சக்கொல்லை குமரன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    இதில் புது வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கலைவாணன், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுத்தானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கல்.
    • இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உப்பு சத்திய கிரகசத்தியாகிரக நினைவு கட்டிட நுழைவு வாயிலில் ஆட்டோ டிரைவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு வேதாரண்யம் காவல்து றையின் சார்பில் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் இங்கர்சால் உள்ளிட்ட போலீசார் வாகன ஒட்டிகளுக்கு சாலைவி ழிப்புணர்வு ஏற்பட்டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும் வானத்தில் போகும்போது செல்போன் பேசக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை போலீசார் எடுத்து கூறினர் மேலும் வேதாரண்யம் பகுதியில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களையும் போலிசார் வழங்கினர் நிகழ்ச்சியில் ஏரளமான போலீசார் பொது மக்கள் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

    ×