search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராட்டுகள்"

    • சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வா–கக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • நிர்வாகக்குழு உறுப்பி–னர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய டெலிபோன் எக்சேன்ஞ் சாலையிலுள்ள கே.கே.361 கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்தது.

    இதையடுத்து, பதவிக்காலம் முடிந்த சங்கத் தலைவர் எம்.நடராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் விழாவில் சங்க செயலாளர் முனிராஜ், பணியாளர் ராஜேந்திரன் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
    • மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    இல்லம் தேடிக் கல்வி மையத்தைதன்னார்வலர் ஷர்மிலி கடந்த 1 வருடங்களாக 30 மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றார். அதனை சேத்திருப்புபள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து மாணவர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.

    ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ்மையத்திற்கு தேவையானவசதிகளை செய்து வருகிறார்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர் மணி, அருள், சுப்பிரமணியன், ஜோதிமணி மற்றும் ஊர் முக்கியஸ்த ர்கள்அனைவரும் மையம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கியுள்ளதுஎன்று பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறினார்.

    மேலும் இதன் விளைவாக 30 மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது என்றும் அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.

    செய்தி த்தாள் வாசிப்பதன் மூலம் அனைத்து அறிவுகளையும் சேர்த்து வருகின்றனர்.மாணவர்களின் பெற்றோர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தைம பாராட்டி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

    • மானாமதுரை அருகே சிலம்பத்தில் உலக சாதனை படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
    • கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே திருப்பாசேத்தி மலவராய னேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலன். இவரது மகள் செல்வ பிரியா (வயது 21). இவர் சிறுவயதில் இருந்தே சாதனை படைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஓவிய போட்டி, தடகள போட்டி, படிப்பு என எல்லா வற்றிலும் திறமையை மெருகேற்றிக் கொண்ட இவர் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திலும் பயிற்சி பெற்று அனைவருக்கும் சொல்லிக்கொடுக்கும் வகையில் கோலோச்சி இருக்கிறார். பி.எஸ்.சி. பட்டப்படிப்பு முடித்த இவர் சிலம்ப மாஸ்டர் குமாரிடம் முறையாக கற்று தினமும் பயிற்சி மேற்கொண்டார்.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடை பெற்ற உலக சாதனைப்போட்டியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி செல்வ பிரியா உலக சாதனை படைத்துள்ளார்.

    இந்த சாதனைக்கு அவரது பெற்றோர் மற்றும் பேராசிரியைகள் ஜெபா, சுகன்யா உள்ளிட்ட பலர் உறுதுணையாக இருந்துள்ளனர். தொடர்ந்து செல்வபிரியா தனது கிராமத்தில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

    கிராம பெண்கள் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என முன் உதாரணமாக வெற்றி பெற்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவகங்கையில் என்னைப்போல் சாதிக்க பல்வேறு பெண்கள் இருக்கி றார்கள். அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், வாய்ப்பையும் கொடுக்க வேண்டும் என்றார்.

    ×