search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா"

    • இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது.
    • தடையை எதிர்ப்பவர்கள், வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர்.

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பின் மீது தடை விதித்துள்ளதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கடசிகள் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளதாவது:

    பி.எப்.ஐ.மீதான தடை காலத்தின் மிகப் பெரிய தேவையாக இருந்தது. நாடு மற்றும் மனித நேயத்தை பாதுகாக்க மத்திய அரசு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த முடிவுக்காக மத்திய அரசை பாராட்ட வார்த்தைகள் போதாது. இந்த தடையை எதிர்ப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும்  வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.

    இந்த தடையை எதிர்ப்பதன் மூலம், அவர்கள் வன்முறை மற்றும் கொலைகளை ஆதரிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். இன்று ஆர்.எஸ்.எஸ்ஸைத் தடை செய்யக் கோரும் அனைத்துத் தலைவர்களும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலையின் போது சிறையில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் போராட்டமும், அவர்களின் தியாகமும்தான் இந்தத் தலைவர்கள் அனைவரையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை பாதுகாத்ததுடன், நாடு சர்வாதிகார ஆட்சிக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜூலை 31-ந்தேதி மக்கள் சங்கமம் மாநாடு மங்கலத்தில் நடைபெற உள்ளது.
    • இஸ்லாமிய கண்காட்சி- பேரணி, விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    மங்கலம் :

    பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு வருகிற ஜூலை 31-ந்தேதி மக்கள் சங்கமம் மாநாடு மங்கலத்தில் நடைபெற உள்ளது.

    மாநாட்டைத் தொடர்ந்து இஸ்லாமிய கண்காட்சி- பேரணி, சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பாக மாநாடு அலுவலகம் திறக்கப்பட்டது.

    மங்கலம் பாப்புலர் ப்ரண்ட் நகர தலைவர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார். மாநாட்டு அலுவலகத்தை மாவட்ட தலைவர் ஹபிபுர் ரஹ்மான் திறந்து வைத்தார்.மங்கலம் நகர செயலாளர் அப்துல் ரஜாக் வரவேற்று பேசினார்.

    பி.எப்.ஐ. மாவட்ட செயலாளர் முகமது ரபிக் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு , துணை தலைவர் முஜிபுர் ரகுமான் , மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட எஸ்.டி.டி.யு. தலைவர் முஹம்மது பாரூக் ,எஸ்.டி.பி.ஐ. பல்லடம் சட்டமன்ற தொகுதி தலைவர் யாசர் அராபத் மற்றும் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் ப்ரண்ட் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×